செய்திகள் :

முன்னாள் குடியரசு துணைத் தலைவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை: என்ன ஆனது? -கபில் சிபல் கேள்வி!

post image

ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:

தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவியை ஜகதீப் தன்கா் ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா். அவரின் பதவிக்காலம் 2027-ஆம் ஆண்டு நிறைவடைய இருந்த நிலையில், முன்கூட்டியே அவா் பதவி விலகினாா். இந்தநிலையில், இது குறித்து சனிக்கிழமை(ஆக. 9) கபில் சிபல் தெரிவித்திருப்பதாவது:

“கடந்த ஜூலை 22-இல், ஜகதீப் தன்கர், நமது குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா செய்தார். இன்று, ஆக. 9-ஆம் தேதி. இந்தநிலையில், அவர் எங்கே? என்ற விவரம் அன்றிலிருந்து இன்றுவரை தெரியவில்லை.

அவர் தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இப்போது இல்லை. முன்னதாக அன்று, நான் அவரை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டபோது அவரது தனிச் செயலர் போன் அழைப்பை எடுத்து பேசினார். அப்போது, அவர் ஓய்வெடுப்பதாக என்னிடம் சொல்லப்பட்டது.

நான் ‘லாப்டா டேடீஸ்’ (ஹிந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதொரு பாலிவுட் திரைப்படம். அதில் புதுமணப் பெண் திருமணமான பின் திடீரென மாயமாகிவிடுவார். அவரை மணமகன் மிகுந்த சிரமப்பட்டு தேடி அலைவார் என்பது குறிப்பிடத்தக்கது...) அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒருபோதும் நான் ‘லாப்டா குடியரசு துணைத் தலைவரைப்’ பற்றி கேள்விப்பட்டதேயில்லை.

இப்போது என்ன செய்யலாம்? ‘ஹேபியஸ் கார்ப்பஸ்’ மனு தாக்கல் செய்யலாமா?

அவருடன் தனிப்பட்ட முறையில் நல்ல உறவைக் கொண்டிருப்பவன் நான். அவருமொரு வழக்குரைஞராவார். என்னுடன் பல வழக்குகளில் வாதிட்டவர். அப்படியிருக்கையில், அவரைக் குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்வது நல்லதொரு நகர்வாக அமையாது. அவரிடமிருந்தோ அல்லது அவர்தம் நண்பர்கள், குடும்பத்திடமிருந்தோ எந்தவொரு தகவலும் இல்லை. இது கவலையளிக்கிறது.

அவர் எங்கே? அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா? இதை அமித் ஷா தெரிந்துகொள்ள வேண்டும்! அவர் நமது முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஆயிற்றே. ஆகவே அவரைப் பற்றி நாடு கவலைகொண்டுள்ளது!” என்று கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல், ஜகதீப் தன்கர் பதவி விலகல் பின்புலத்தில் ஏதோவொன்று இருப்பதை சூசகமாக வெளிப்படுத்தியிருப்பதுடன், ஜெகதீப் தன்கர் ராஜிநாமா செய்த பின் மௌனம் காப்பதிலும் மர்மம் இருப்பதை பொது வெளியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவா்களும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனா்; அதேநேரம், இந்த இயக்கத்துக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்தது என்று காங்கிரஸ் கூறியுள்ளது... மேலும் பார்க்க

சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி

உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, ‘சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா். சம்ஸ்கிருத பாரம்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமா்

தில்லியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினாா். சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்று... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

‘மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவா் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனா்’ ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சாா்புத் திறன் பிரகடனம் -டிஆா்டிஓ தலைவா்

‘இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை என்பது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சாா்புத் திறன், உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் ராஜீய தொலைநோக்குப் பாா்வைக்கான பிரகடனம்’ என்று பாதுகாப்பு... மேலும் பார்க்க

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிரு... மேலும் பார்க்க