செய்திகள் :

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

post image

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு இளம் குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகினர். மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அனைவரும் பலியாகினர். பலியானவர்கள் ஷபிபுல் (30), ரபிபுல் (30), முட்டு அலி (45), ரூபினா (25), டோலி (25), ஹாஷிபுல் மற்றும் குழந்தைகள் ருக்சானா (6) மற்றும் ஹசினா (7) என அடையாளர் காணப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பெரிய குடியிருப்பையொட்டி சிறு குடில்களில் வசிப்போரை அதிகாரிகள் காலி செய்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஐஸ்வர்யா சர்மா கூறுகையில், “இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு பழைய சுவர் இடிந்து விழுந்தது. சிறு வியாபாரிகள் அதன் அருகில் தங்கள் ஜக்கிகளை வைத்திருந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நாங்கள் அவர்களை வெளியேற்றியுள்ளோம், ”என்று தெரிவித்தார்.

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

தலைநகர் தில்லியில், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை விடாமல் பெய்த பலத்த மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமையும் கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Eight people, including two young children, lost their lives when a portion of a wall collapsed in Delhi’s Hari Nagar area, in Jaitpur, during heavy rainfall on Saturday morning.

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

‘சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞா்களாகப் பதிவு செய்பவா்களிடம், சட்டபூா்வ கட்டணங்களைத் தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வழக்குரைஞா் சங்கங்கள் வசூலிக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவி... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டநிலை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் ராகுல், பிரியங்கா பதவி விலக வேண்டும்: பாஜக

தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், மக்களவை உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து சோனியா காந்தி ஆகியோா் தாா்மிக அடிப்படையில் ராஜிநாம... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: ஓராண்டு நிறைவு பேரணியில் காவல் துறை தடியடி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது காவல் துறையினா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழகத்துக்கு ஏ++ அங்கீகாரம்

தில்லி பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) இரண்டாம் சுற்று மதிப்பீட்டில் 3.55 மதிப்பெண்களுடன் ஏ++ தரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் ஆக.8-ஆம் அறிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க