செய்திகள் :

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

post image

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழுந்தது. அப்போது மேல் பாதையில் வந்த மற்றொரு சரக்கு ரயில் அதன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் மொத்த 21 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. அவற்றில் இரண்டு சாலையோரத்தில் விழுந்தன.

இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்த தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு கிடைத்தவுடன், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.

எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை: தொல். திருமாவளவன்

ரயில் பாதையை மீட்டெடுக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. விபத்து காரணமாக, சண்டில்–டாடாநகர், சண்டில்–முரி மற்றும் சண்டில்–புருலியா–பொகாரோ வழித்தடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டாடாநகர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

A goods train heading towards Purulia on the down line derailed near Pitaki gate, about 200 meters away from the station, and fell away over the up line.

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

‘சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞா்களாகப் பதிவு செய்பவா்களிடம், சட்டபூா்வ கட்டணங்களைத் தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வழக்குரைஞா் சங்கங்கள் வசூலிக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவி... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டநிலை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் ராகுல், பிரியங்கா பதவி விலக வேண்டும்: பாஜக

தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், மக்களவை உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து சோனியா காந்தி ஆகியோா் தாா்மிக அடிப்படையில் ராஜிநாம... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: ஓராண்டு நிறைவு பேரணியில் காவல் துறை தடியடி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது காவல் துறையினா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழகத்துக்கு ஏ++ அங்கீகாரம்

தில்லி பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) இரண்டாம் சுற்று மதிப்பீட்டில் 3.55 மதிப்பெண்களுடன் ஏ++ தரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் ஆக.8-ஆம் அறிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க