செய்திகள் :

சென்னையில் நடந்த கொலை.. கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 50 நாள்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

post image

கோவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று இரண்டு பேர் கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன் (45) மற்றும் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகப்பெருமாள் (26) என்று தெரிந்தது.

கோவை
கோவை

இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் இருவரும் காவல்துறையில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முருகப்பெருமாள் சென்னையில் உள்ளார். அங்கு அவருக்கு ஜெயராமன் (24) என்ற நண்பர் இருந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் முருகப்பெருமாள், ஜெயராமன் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பெருமாள், ஜெயராமனை கொலை செய்துள்ளார்.

கொலை
கொலை

காவல்துறையில் சிக்காமல் இருப்பதற்காக அவர் பாலமுருகனின் உதவியை நாடியுள்ளார். பாலமுருகன் கோவையில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து ஜெயராமனின் உடலை கார் மூலம் சென்னையில் இருந்து கோவை எடுத்து வந்துள்ளனர்.

பிறகு மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் ஜெயராமனின் உடலை வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்று சுமார் 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஜெயராமனை காணவில்லை என்ற புகாரில் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், முருகப்பெருமாள் மற்றும் பாலமுருகன் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்.

சம்பவ இடம்

கிணற்றில் இருந்த ஜெயராமனின் உடல் மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை தனியார் நிறுவனம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த கை - காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம், சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. அதன் அருகிலேயே ரயில் தண்டவாளம் இருக்கிறது.கோவை ஏதாவது... மேலும் பார்க்க

தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் - அருள் ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அருள் ஆனந்தி ஆண்டிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஆனந்தி வேலைக்கு செ... மேலும் பார்க்க

சேலம்: நகைக்கடை உரிமையாளர்கள் மீது ஆசிட் வீசி நகைக் கொள்ளை முயற்சி; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் அப்பகுதியில் ஏ.வி.எஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8:45 மணியளவில் இருவர் நகை வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது ... மேலும் பார்க்க

`திருமணம், நட்பு, ஆபாச மெசேஜ்' - Facebook -ல் பழகிய பெண்களிடம் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

சைபர் கிரிமினல்கள் அடிக்கடி பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பணமோசடி புகார் அல்லது திருமண ஆசை என எதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் பறிக்கின்றனர். அதிகமான நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் ம... மேலும் பார்க்க

அந்தியூர் குதிரை சந்தை: மர்மமான முறையில் இறந்த 6 குதிரைகள்; பிரேதப் பரிசோதனை முடிவு சொல்வது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.ஆண்டுதோறும் ஆடி மாதம் குருநாதசுவாமி கோவிலின் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும்... மேலும் பார்க்க

டெல்லி: வாகனங்களை நிறுத்துவதில் தகராறு - பாலிவுட் நடிகை ஹுமா குரேஷின் சகோதரர் படுகொலை

பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆசிப் குரேஷி, டெல்லி நிஜாமுதின் பகுதியில் வசித்து வந்தார். ஆசிப் குரேஷி வீட்டிற்கு வெளியில் பக்கத்து வீட்டுக்காரர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இர... மேலும் பார்க்க