செய்திகள் :

சேலம்: நகைக்கடை உரிமையாளர்கள் மீது ஆசிட் வீசி நகைக் கொள்ளை முயற்சி; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

post image

சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் அப்பகுதியில் ஏ.வி.எஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8:45 மணியளவில் இருவர் நகை வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள நகைகளை காட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை நகைக்கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன் அவரது மனைவி செல்வலட்சுமி, கடையில் பணிபுரிந்த வசந்தி ஆகியோர் மீது ஊற்றியுள்ளார். தொடர்ந்து டிராவில் இருந்த 80 பவுன் நகையும் கொள்ளையடிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன் அந்த நகைகளை பிடுங்கிய போது ஆசிட் ஊற்றியும் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்கள் ஓட முயற்சித்தனர். அதில் ஒருவரை கடை உரிமையாளர் மடக்கிப்பிடித்தார். மற்றொரு நபர் கடை வீதி வழியாக தப்பி ஓடும்போது அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்று ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மடக்கிப் பிடித்தனர்.

ஆசிட் வீச்சு

அந்த நபரிடம் துப்பாக்கி இருந்ததால் துப்பாக்கியை காட்டி பொதுமக்களிடம் மிரட்டியுள்ளார். தொடர்ந்து பொதுமக்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரையும் போலீசார் மீட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒருவர் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் என்பதும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள நகைக்கடையில் துணிகர கொள்ளை சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

`திருமணம், நட்பு, ஆபாச மெசேஜ்' - Facebook -ல் பழகிய பெண்களிடம் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

சைபர் கிரிமினல்கள் அடிக்கடி பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பணமோசடி புகார் அல்லது திருமண ஆசை என எதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் பறிக்கின்றனர். அதிகமான நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் ம... மேலும் பார்க்க

அந்தியூர் குதிரை சந்தை: மர்மமான முறையில் இறந்த 6 குதிரைகள்; பிரேதப் பரிசோதனை முடிவு சொல்வது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.ஆண்டுதோறும் ஆடி மாதம் குருநாதசுவாமி கோவிலின் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும்... மேலும் பார்க்க

டெல்லி: வாகனங்களை நிறுத்துவதில் தகராறு - பாலிவுட் நடிகை ஹுமா குரேஷின் சகோதரர் படுகொலை

பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆசிப் குரேஷி, டெல்லி நிஜாமுதின் பகுதியில் வசித்து வந்தார். ஆசிப் குரேஷி வீட்டிற்கு வெளியில் பக்கத்து வீட்டுக்காரர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இர... மேலும் பார்க்க

"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம்

திமுக ஆட்சியில் நடந்த 19 போலி மோதல் சம்பவங்களில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.SSI சண்முகவேல்தியாகு ஒருங்கிணைப்பாளராகவ... மேலும் பார்க்க

``கபில் சர்மாவின் மும்பை ரெஸ்டாரண்ட் மீதும் தாக்குவோம்'' - மிரட்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க்

கனடாவின் சுர்ரே என்ற இடத்தில் காமெடி நடிகர் கபில் சர்மாவிற்கு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. இந்த ரெஸ்டாரண்ட் மீது ஏற்கெனவே கடந்த மாதம் 10-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இத்துப்பாக்கிச்சூட்டிற்கு கா... மேலும் பார்க்க

`ஆபாச காட்சிகள்' - ஸ்வேதா மேனன் மீது FIR பதிவு; நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்த ஐகோர்ட்

மலையாள சினிமா நடிகை ஸ்வேதா மேனன் ஆபாச காட்சிகளில் நடித்ததாகவும், பணத்துக்காக விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து மார்ட்டின் மேனாச்சேரி என்பவர் காவல் நிலைய... மேலும் பார்க்க