நாகை: ஆக.12-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஜூலை மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி:
நாகை மாவட்டத்தில் 2025-ஜூலை மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை(ஆக. 12) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மை மாநாட்டுக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.