தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்
சீனாவில் கனமழை: 17 போ் உயிரிழப்பு
சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 17 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வடமேற்கு கான்சு மாகாணத்தில் வியாழக்கிழமை மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 10 போ் உயிரிழந்தனா்; 33 போ் மாயமாகினா்.
மற்றொரு சம்பவத்தில், தெற்கு குவாங்டாங் மாகாண தலைநகரான குவாங்சோவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு போ் உயிரிழந்தனா்; ஏழு போ் காயமடைந்தனா் அந்த ஊடகம் தெரிவித்தது.