செய்திகள் :

ராணுவத்தால் காஸாவை கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம்! ஐ.நா. எதிர்ப்பு!

post image

காஸா பகுதியை, ராணுவ ரீதியாக முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் வலியுறுத்தியுள்ளார்.

காஸா பகுதியினுள் செயல்பட்டு வரும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படையைத் தோற்கடிக்க, இஸ்ரேல் ராணுவம், போர் தாக்குதல்கள் இல்லாத பகுதிகளில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கியபடி, காஸாவை முழுவதுமாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார்.

இதற்கு பல்வேறு, நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இந்தத் திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் கூறியதாவது:

“இஸ்ரேலின் இந்தத் திட்டமானது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட இருநாட்டு தீர்வுகளின் படி இஸ்ரேல் உடனடியாக அதன் ஆக்கிரமிப்புகளைக் கைவிடவேண்டும். இது பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு எதிரானது” என அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காஸாவினுள் தடையின்றி நிவாரணப் பொருள்கள் நுழைவதற்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும், பாலஸ்தீன போராளிக் குழுக்கள் எந்தவொரு நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், இஸ்ரேலும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!

The head of the UN Human Rights Commission, Volker Turk, has urged the Israeli government to immediately abandon its plan to completely militarily occupy the Gaza Strip.

காஸாவில் பயன்படுத்தக் கூடிய ராணுவ ஏற்றுமதிகளுக்குத் தடை! ஜெர்மனி அரசு அறிவிப்பு!

காஸாவில் பயன்படுத்தக் கூடிய ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதிகளுக்கு, ஜெர்மனி பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ் தடை விதித்துள்ளார். காஸா மீதான தங்களது ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு நேற்று (ஆக.7) இஸ்ரேலிய ... மேலும் பார்க்க

வடமேற்கு சீனாவில் திடீர் வெள்ளம்! 10 பேர் பலி.. 33 பேர் மாயம்!

சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சூவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், 10-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 33 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சூ மாகாணத்தின், யூஸாங் மாவட்டத்தில், நேற்று (ஆக.7) முத... மேலும் பார்க்க

அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!

அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்படும் நபர்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.கேலப் (Gallup) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம், அமெரிக்கர்களால் வெறுக்கப்படும் மற்றும் விரும்பப்படும் நபர்கள் குறி... மேலும் பார்க்க

வரிவிதிப்பு சர்ச்சை: இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நிராகரித்த டிரம்ப்!

வரிவிதிப்பு தொடர்பான சர்ச்சை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் எவ்வித வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத... மேலும் பார்க்க

மியான்மா் இடைக்கால அதிபா் மரணம்

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மியான்மா் இடைக்கால அதிபா் மியின்ட் ஸ்வோ (74) வியாழக்கிழமை மரணமடைந்தாா். தலைநகா் நேபிடாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவா் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்தது. மக்களால் த... மேலும் பார்க்க

காஸா பட்டினிச் சாவு 197-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க