செய்திகள் :

தொடர்ச்சியாக ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பார்த்திவ் படேல் பாராட்டு!

post image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவை முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.

உலகின் நம்பர்.1 ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தார். இந்த தொடரில் 516 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஜடேஜா நான்காமிடம் பிடித்தார்.

5 போட்டிகளில் விளையாடிய அவர் 516 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். இந்த தொடரில் அவர் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

பார்த்திவ் படேல் புகழாரம்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியாக ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா குவித்த 516 ரன்கள் மிகவும் மதிப்பு மிக்கவை. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு முறை பேட்டிங்கில் சொதப்பியது. அந்த நேரத்தில் 6-வது மற்றும் 7-வது இடத்தில் களமிறங்கும் வீரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். இயல்பாகவே அந்த இடத்தில் ரவீந்திர ஜடேஜா களமிறங்குகிறார். முதல் போட்டிக்குப் பிறகு, மீதமுள்ள போட்டிகளில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பவில்லை. இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ஜடேஜா தொடர்ந்து ரன்கள் குவித்தது மிகவும் முக்கியமானதாக மாறியது என்றார்.

இருதரப்பு டெஸ்ட் தொடரில் மூன்று இந்திய வீரர்கள் 500 ரன்களுக்கும் அதிகமாக குவிப்பது இதுவே முதல் முறை. இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா 500 ரன்களுக்கும் அதிகமாக குவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சதம் விளாசிய டெவான் கான்வே; வலுவான நிலையில் நியூசி.!

Former player Parthiv Patel has praised Ravindra Jadeja for his consistent performance in the Test series against England.

யாருக்கும் இந்தியா அடிபணியாது! டிரம்ப்புக்கு பியூஷ் கோயல் மறைமுகத் தாக்கு!

யாருக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொருளாதார மிரட்டலுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகிறாரா விராட் கோலி?

இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை பகிர்ந்ததால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அவர் தயாராகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தி... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: சூர்யகுமார் யாதவ் முறியடிக்க காத்திருக்கும் 3 சாதனைகள்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 சாதனைகள் படைக்கவிருக்கிறார்.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ... மேலும் பார்க்க

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சதம் விளாசிய டெவான் கான்வே; வலுவான நிலையில் நியூசி.!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே சதம் விளாசி அசத்தியுள்ளார்.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று... மேலும் பார்க்க

தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள்..! கம்பீரின் வாக்குறுதி பற்றி அபிமன்யு தந்தை பேட்டி!

இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு விரைவில் இடம் கிடைக்கும் என தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதியளித்ததாக அவரது தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் ... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு கடும் சவால் காத்திருக்கிறது: கிளன் மெக்ராத்

ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என முழுமையாகக் கைப்பற்றும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் கணித்துள்ளார்.இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போ... மேலும் பார்க்க