செய்திகள் :

Personal Finance: உங்கள் வீட்டு பட்ஜெட் சூப்பரா, சுமாரா, இல்ல டேஞ்சரா இருக்கா? நிதிச் சுதந்திரம் - 3

post image

‘‘சார், எனக்குப் பெரிசா பணம் சேர்க்கணுங்கிற ஆசை இருக்கு. ஆனா,  சம்பாதிக்கிற பணம் அத்தனையும் செலவாயிடுது…’’

‘‘சார், எனக்கு மாசாமாசம் 2 லட்சம் கிடைக்குது. ஆனா, 10,000 ரூபா மாசக் கடைசியில மிஞ்ச மாட்டேங்குது.’’

இது மாதிரி சொல்கிற பலரையும் நாம் பார்த்திருப்போம். இவர்களின் பிரச்னைக்கு முக்கியமான காரணமே, கேஷ் ஃப்ளோ மேனேஜ்மென்ட்தான். அப்படி என்றால், நமக்கு வருமானத்தைச் சரியாக நிர்வாகம் செய்வது. நிதி நிர்வாகத்தின் அடிப்படை இந்த கேஷ் ஃப்ளோ மேனேஜ்மென்ட்தான். நிதிச் சுதந்திரம் அடைவதற்கும் இதுதான் அடிப்படையான விஷயமாக இருக்கிறது.

செலவு நிர்வாகம்

வரவும், செலவும்…

குடும்ப நிதி நிர்வாகத்தில் அடிப்படையான விஷயம் என்ன?

நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோமா, அதில் 50% - 60% வரை மட்டுமே நம் அனைத்து செலவுகளும் இருக்க வேண்டும். வரவைவிட நாம் அதிகமாகச் செலவு செய்தால், அடுத்துவரும் நாள்களை நாம் கடன் வாங்கித்தான் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

கடன் வாங்கினால், வட்டி கட்ட வேண்டியிருக்கும். வட்டி கட்டினால், நம் செலவு இன்னும் அதிகரிக்கவே செய்யும். எனவே, கடன் வாங்காமல் நிலைமையைச் சமாளிப்பது அவசியம். தவிர, 50% - 60% வரை செலவு செய்தபின் மிச்சமிருக்கும் பணத்தைச் சேமிப்பது அவசியம்; சேமித்த பணத்தை முதலீடு செய்வதும் அவசியம்.

குடும்ப பட்ஜெட்

வீட்டு பட்ஜெட் முக்கியம் பாஸ்…

உங்களைச் சுற்றி இருக்கிற 100 பேரிடம், ‘நீங்கள் மாதந்தோறும் பட்ஜெட் போட்டு செலவு செய்கிறீர்களா?’ என்று கேளுங்கள். 100 பேரில் 60% பேர் பட்ஜெட் போடுவதே இல்லை என்பார்கள். 30% பேர், பட்ஜெட் போடுகிறோம். ஆனால், அதன்படி நடப்பதில்லை என்பார்கள். வெறும் 10% பேர் மட்டுமே சரியாக பட்ஜெட் போட்டு அதன்படி நடப்பவர்களாக இருப்பார்கள்.

ஆக, முதலில் நீங்கள் பட்ஜெட் போட்டு அதன்படி செலவு செய்கிறீர்களா என்று பாருங்கள். ஏன் பட்ஜெட் போட வேண்டும்…? பட்ஜெட் போட்டு செலவு செய்தால்தான், நாம் எதற்கெல்லாம் செலவு செய்கிறோம். எவ்வளவு பணத்தைச் செலவு செய்கிறோம், எவ்வளவு பணம் மிச்சம் ஆகிறது என்பது தெரியும். அப்படி மிச்சமாகும் பணத்தில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்வது என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்க முடியும்.

பட்ஜெட்

எப்படி பட்ஜெட் போடுவது?

எப்படி பட்ஜெட் போடுவது என்கிற கேள்வி பலருக்கும் இருக்கலாம். ஆனால், பட்ஜெட் போட்டுத்தான் செலவு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொருவரும் நினைத்துவிட்டால், பட்ஜெட் போடுவதற்கான வழி கிடைத்துவிடும்.

இப்படித்தான் பட்ஜெட் போட வேண்டும் என எந்த வரைமுறையும் கிடையாது. அதைக் காகிதத்தில் போடலாம். கம்ப்யூட்டரில் போடலாம்; சமீபத்தில் இலவசமாகக் கிடைக்கிற ஆப்கள் மூலமும் நீங்கள் பட்ஜெட் போடலாம். Money Manager என்று ஒரு ஆப் இருக்கிறது. இந்த ஆப்பில் உங்கள் செலவுகள் அனைத்தையும் குறித்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் எதற்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை இந்த ஆப் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிடும்.

இது Good budget, Mon3fy, Money view என பட்ஜெட் டூல்களும் இருக்கிறது. இந்த டூல்களைச் சரியானபடி பயன்படுத்திக்கொள்வதன் மூலம் உங்கள் பட்ஜெட் சூப்பரா, சுமாரா அல்லது டேஞ்சலர் ஜோனில் இருக்கிறீர்களா என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

பட்ஜெட்

பட்ஜெட்தான் அடிப்படை….

பட்ஜெட் போட்டு செலவு செய்தாலே உங்கள் நிதி நிர்வாகம் செய்வதில் உங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அப்போது உங்களால் சிக்கனமாக பணத்தைச் செலவு செய்ய முடியும். எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தையும் முதலீடு செய்ய முடியும். இப்படிச் செய்வதன் மூலமே நீங்கள் நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும்!

நீங்களும் நிதிச் சுதந்திரம் பெற வேண்டுமா? 'லாபம்' மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டைத் துவங்க, க்ளிக் பண்ணுங்க: https://wa.me/919600296001?text=நிதி%20சுதந்திரம்

கால்: 9600296001 | வெப்சைட்: https://labham.money/

Loan: கடனை முன்கூட்டியே அடைப்பது லாபமா? இல்ல இதுக்கு அபராதம் உண்டா?!

கடன் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது காசு கொஞ்சம் கையில் கிடைத்திருக்கிறது. இந்தக் காசை வைத்து கடனை முன்னரே அடைக்கலாமா... கூடாதா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இந்தச் சந்தேகத்திற்கா... மேலும் பார்க்க

Labham Webinar: அடைவோம் நிதிச் சுதந்திரம்! ₹5 கோடி நிதி சேர்ப்பது எப்படி?

நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைவது எப்போது? உங்கள் வாழ்க்கைக்குத்தேவையான செல்வத்தைச் சேர்த்து நிதிச் சுதந்திரம் பெற ஆசையா? லாபம் வழங்கும் 'சுய நிதி ... மேலும் பார்க்க

Personal Finance: வைகைப் புயல் வடிவேலு கற்றுத் தந்த பாடம்… நிதிச் சுதந்திரம் - 2

‘போக்கிரி’ படத்தில் வைகைப் புயல் வடிவேலு சின்னஞ்சிறுசுகளிடம் எக்குத்தப்பாக அடி வாங்கிய பிறகு சொல்லும் வசனம்: ‘‘எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும்…’’இந்த வசனம் எதற்குப் பொருந்துமோ, பொருந்தாதோ, நாம் நிதிச்... மேலும் பார்க்க

சுதந்திரம் வந்தாச்சு... ஆனால், நிதிச் சுதந்திரம் கிடைச்சுடுச்சா? நிதிச் சுதந்திரம் - 1

நம் தாய் நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் முடிந்து 79-ஆம் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. பிரிட்டீஷ்காரர்கள் நம் நாட்டைத் தொடர்ந்து 150 ஆண்டுகளுக்குமேல் கொள்ளை அடித்ததன் விளைவாக, பொருளா... மேலும் பார்க்க

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ₹10 கோடி நிதி சேர்ப்பது எப்படி?

'கடந்த 10 ஆண்டுகளாக சொந்த மண்ணை விட்டு கண் காணாத ஏதோவொரு தேசத்தில் சொந்த பந்தங்களை எல்லாம் விட்டு வேலை செய்து வருகிறேன். ஆனால் இதெல்லாம் எதற்கு?' பிழைப்புக்காக தாய் நாட்டை விட்டுப் போன எல்லோரும், ஏதோவ... மேலும் பார்க்க

LIC: 35 வருடத்திற்கும் மேலான அனுபவம்; எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராகப் பொறுப்பேற்ற முரளிதரன்

திரு. கோ.முரளிதர் அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியிலுள்ள 261 கிளைகளைக் கொண்ட எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக 01.08.2025 அன்று பொறுப்பேற்றுள்ளார்.எல்.ஐ.சி.யில் 35 வருடத்திற்கும் மேலாக பணி... மேலும் பார்க்க