செய்திகள் :

28 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் டிஸ்கோ சாந்தி!

post image

நடிகை டிஸ்கோ சாந்தி, சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ”புல்லட்” திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்குத் திரும்பியுள்ளார்.

தமிழ் திரையுலகில், 1980 மற்றும் 90 காலங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், நடிகை டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி. கடந்த 1998 ஆம் ஆண்டுக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகி இருந்த அவர், நடிகர் ராகவா லாரன்ஸின் புதிய திரைப்படமான “புல்லட்”-ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், அவரது தம்பி எல்வின் ஆகியோர் நடிக்கும், புல்லட் திரைப்படத்தின் டீசரை நடிகர் விஷால் இன்று (ஆக.8) வெளியிட்டார்.

நடிகர் ராகவா லாரன்ஸ், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்தப் புதிய படத்தில், குறி சொல்லும் பெண்ணாக நடிகை டிஸ்கோ சாந்தி நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மூலம் சுமார் 28 ஆண்டுகள் கழித்து நடிகை டிஸ்கோ சாந்தி திரையில் தோன்றவுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க: தம்பி எல்வினுடன் ராகவா லாரன்ஸ்... புல்லட் டீசர்!

Actress Disco Shanthi has returned to the film industry after about 28 years with the film "Bullet".

கூலி டிக்கெட்டை வாங்க குவிந்த கேரள ரசிகர்கள்... 1 மணி நேரத்தில் ரூ.1 கோடி வசூல்!

கூலி படத்தின் கேரள முன்பதிவு ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடியை வசூலித்து அசத்தியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.பான் இந்திய பிர... மேலும் பார்க்க

வறுமையும் ஆஞ்சநேயரும்... திரையரங்குகளில் வெளியானது நாகேஷ் பேரனின் வானரன்!

நடிகர் நாகேஷின் பேரனான பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ள வானரன் திரைப்படம் இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான கலைஞர்களில் மறைந்த நடிகர் நாகேஷும் ஒருவராக அறியப்படுகிற... மேலும் பார்க்க

வரலட்சுமி நோன்பு: நெல்லையப்பர் கோவிலில் 1,008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை!

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்த... மேலும் பார்க்க

பாடகி என்றால் இப்படி உடை அணியக்கூடாதா? ஜொனிடா காந்தி ஆவேசம்!

பாடகி ஜொனிடா காந்தி பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்துள்ளார். பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ஜொனிடா காந்தி (35) தில்லியைச் சேர்ந்தவர். கனடாவில் படித்த இவர... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் - 2 தொடருக்கு பெருகும் வரவேற்பு! டிஆர்பியில் அசத்தல்!

எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி, கடந்த வாரங்களைவிட, இந்த வாரம் அதிக புள்ளிகளைப் பெற்று, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 த... மேலும் பார்க்க