செய்திகள் :

பாடகி என்றால் இப்படி உடை அணியக்கூடாதா? ஜொனிடா காந்தி ஆவேசம்!

post image

பாடகி ஜொனிடா காந்தி பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்துள்ளார்.

பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ஜொனிடா காந்தி (35) தில்லியைச் சேர்ந்தவர். கனடாவில் படித்த இவர் முதல்முறையாக 2013-இல் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பாடல் பாடினார்.

தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் ‘மென்டல் மனதில்..’ எனும் பாடலில் அறிமுகமாகி 24, காற்று வெளியிடை, சர்கார், டாக்டர், பீஸ்ட், ஜவான் எனத் தமிழ் ரசிகர்களின் பிடித்தமான பாடல்களைப் பாடியவர்கள் பட்டியலில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது ஆடைத் தேர்வு குறித்து சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இந்நிலையில், இது குறித்து ஜொனிடா காந்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

பாடகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா?

சில மக்கள் பாடகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள். ஒரு பெண் எப்படி நினைக்கிறாளோ அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சில நேரங்களில் மேடையில் ஆடையில் ஒளிரும் ஒளித்தகடுகளுடன், சில நேரங்களில் நிகழ்ச்சியில் புடவையுடன், பயிற்சியின்போது தளர்வான ஆடைகளுடன், சில நேரங்களில் கேமிராக்கு முன்பாக நூலிழைகளான உடைகளுடன் இருக்கலாம்!

அழகாக இருப்பதால் நமது திறமை இல்லாதது ஆகாது. சமூகத்தால் கருதப்படும் பாதுகாப்பு இல்லாத உடையினால் நமது வலிமை என்றும் மறையப்போவதில்லை. உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் தாராளமாக இங்கு கமெண்ட் செய்துவிட்டுச் செல்லலாம்... எனக் கூறியுள்ளார்.

jonita gandhi post
ஜொனிடா காந்தியின் பதிவு.

Singer Jonita Gandhi has responded to critics on social media about women's freedom of dress.

வறுமையும் ஆஞ்சநேயரும்... திரையரங்குகளில் வெளியானது நாகேஷ் பேரனின் வானரன்!

நடிகர் நாகேஷின் பேரனான பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ள வானரன் திரைப்படம் இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான கலைஞர்களில் மறைந்த நடிகர் நாகேஷும் ஒருவராக அறியப்படுகிற... மேலும் பார்க்க

வரலட்சுமி நோன்பு: நெல்லையப்பர் கோவிலில் 1,008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை!

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்த... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் - 2 தொடருக்கு பெருகும் வரவேற்பு! டிஆர்பியில் அசத்தல்!

எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி, கடந்த வாரங்களைவிட, இந்த வாரம் அதிக புள்ளிகளைப் பெற்று, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 த... மேலும் பார்க்க

வெளியானது சைத்ரா ரெட்டியின் புதிய இணையத் தொடர்!

சைத்ரா ரெட்டி நடிக்கும் புதிய இணையத் தொடரின் முதல் 4 எபிசோடுகள் வெளியாகியுள்ளன.நடிகை சைத்ரா ரெட்டி சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இத்தொடரில் குரு லட்... மேலும் பார்க்க

அனுஷ்காவின் காதி தமிழ் டிரைலர்!

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவான காதி படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக... மேலும் பார்க்க

பார்க்கிங் பிரச்னையால் ஹுமா குரேஷியின் சகோதரர் குத்திக் கொலை!

நடிகை ஹுமா குரேஷியின் சகோதரர் பார்க்கிங் பிரச்னையால் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு தில்லியான போகல் பகுதியில் ஏற்பட்ட பார்க்கிங் பிரச்னையால் ஹுமா குரேஷியின் சகோதரர் ஆசி... மேலும் பார்க்க