செய்திகள் :

விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட்!

post image

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று(ஆக.08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம்.

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதனருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

கடல் நடுவே அமைந்துள்ள இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

இவற்றை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது. அதோடு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கூண்டு பாலமும் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

10 ச.அடி வீட்டில் 80 வாக்காளர்களா? ராகுல் குற்றச்சாட்டும் சரிபார்ப்பும்!

இந்த நிலையில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று(ஆக.08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tickets for boat ride to Vivekananda Rock in Kanyakumari through online from today (August 8).

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் அன்புமணி! காணொலியில் ராமதாஸ்!!

பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான வழக்கில், தலைவர் அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், காணொலி வாயிலாக நீதிபதியிடம் பேசுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவ... மேலும் பார்க்க

சின்னசேலம் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: 3 இளைஞர்கள் பலி

சின்னசேலம் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் மீது சரக்கு ஏற்றிச் செல்லும் வேன் மோதியதில் மூவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட... மேலும் பார்க்க

தூத்துக்குடி பிரச்னைகளை பிரதமரிடம் விவரித்த கனிமொழி எம்.பி.

பிரதமர் நரேந்திர மோடியை திமுக எம்.பி. கனிமொழி இன்று தில்லியில் சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்பு குறித்து, கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில்,பிரதமர் மோடியை சந்தித்து எனது தொகுதியில் (தூத்துக்க... மேலும் பார்க்க

தம்மம்பட்டி சிவன் கோவிலில் பெண்கள் பங்கேற்ற கோபூஜை!

தம்மம்பட்டி சிவன்கோவிலில் 200 பெண்கள் பங்கேற்ற கோபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் மற்றும... மேலும் பார்க்க

வரும் 13ஆ தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ... மேலும் பார்க்க

உயர் நீதிமன்றத்துக்கு வர இயலாது: ராமதாஸ் கடிதம்

சென்னை: அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், நீதிபதி நேரில் வர அழைப்பு விடுத்திருந்த நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு வர இயலாது என ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள... மேலும் பார்க்க