செய்திகள் :

திமுக: மீண்டும் எழுந்த `மாவட்ட பிரிப்பு’ பேச்சு - ஆர்வம் காட்டும் உதயநிதி; அறிவாலய அப்டேட்ஸ்!

post image

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கின்றன. ஆளும் திமுக, `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை தொடங்கி `உடன்பிறப்பே வா’ என்ற நிர்வாகிகள் சந்திப்புவரை தேர்தலுக்கு முழு ஆயுதமாகிக்கொண்டிருக்கிறது.

பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்

தேர்தல் பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கட்சி ரீதியாக சில மாற்றங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது திமுக தலைமை. கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் 16 பேரை அதிரடியாக மாற்றியது. இதில் ஏற்கனவே பதவி பறிக்கப்பட்ட மஸ்தான், அப்துல் வகாப் போன்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

அதேபோல, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மேயர் தினேஷ்குமார் போன்றவர்களுக்குப் புதிதாக வாய்ப்பும் வழங்கப்பட்டது. இதற்குப் பின் திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடியின் பதவி பறிப்பு போன்ற அதிரடி மாற்றங்களையும் செய்தது திமுக தலைமை. மதுரையில் கூட தேர்தலுக்காக மாவட்ட அளவில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

தற்போதைய நிலையில் திமுக-வில் 72-ஆக இருந்த கழக மாவட்டங்கள், தற்போது 76 மாவட்டங்களாக இருக்கின்றன. இன்னும் அதிகமான தொகுதிகளைக் கொண்ட சில மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் எண்ணத்திலிருந்தது திமுக தலைமை. கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாவட்ட பிரிப்பு பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் எழுந்திருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

மீண்டும் எழுந்த பேச்சு!

மாவட்ட பிரிப்பு விவகாரம் குறித்து அறிவாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம். "புதிய மாவட்ட பிரிப்பு விவகாரத்தில் மற்ற அனைவரையும் விட மிகுந்த ஆர்வம் காட்டுவது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தரப்புதானாம். புதிதாக மாவட்டம் பிரித்தால், தனது ஆதரவாளர்களை மாவட்டச் செயலாளராகக் கொண்டுவர முடியும் என்று கணக்குப் போடுகிறது உதயநிதி தரப்பு. தற்போதைய நிலையில் சென்னையில் ஆறு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் இருவர் மட்டுமே உதயநிதியின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார்கள்.

அதேநேரத்தில், சேகர்பாபு, மா.சு போன்றவர்களிடம் ஐந்துக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களைப் பிரித்தால், அங்கே தனக்கான ஆட்களை மாவட்டச் செயலாளராகக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறார்கள். தற்போதைய நிலையில் சென்னை மாவட்ட பிரிப்பு குறித்து துணை முதல்வர், முதல்வர் தரப்பிடம் பலமுறை சொல்லி விட்டாராம். ஆனால், அந்த கோரிக்கைக்கு முதல்வர் தரப்பு ஓகே சொல்வதாக தெரியவில்லையாம்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சென்னை மாவட்டத்தைப் பிரித்து புதிய ஆட்களைக் கொண்டுவந்தால் அது தேர்தலில் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற யோசனையில் இருக்கிறது முதல்வர் தரப்பு.

இந்த விவகாரம் குறித்து உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறது திமுக தலைமை. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரிக்கப் பேச்சுவார்த்தை ஆரம்பம் ஆகியிருக்கிறது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு என்று இரண்டு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை நான்காக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

அதில் ஒரு மாவட்டத்தை இளைஞரணி துணை செயலாளராக இருக்கும் அப்­துல் ­மா­லிக் பெற உதயநிதி தரப்பு மூலம் காய் நகர்த்துகிறார்களாம்.. அதுபோல, மீதமிருக்கும் மற்றொரு மாவட்டமும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரான படைப்பை மனோகரனுக்குச் செல்லவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.. மாவட்ட பிரிப்பு குறித்து தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தான் நடந்து கொண்டிருக்கிறது. தலைவர் எடுக்கும் முடிவுதான் இறுதி" என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"வாக்குச்சாவடி வீடியோக்களை ஏன் அழிக்கிறீர்கள்?" - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தியின் 5 கேள்விகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ.க-வுடன் சேர்ந்து இந்திய அர... மேலும் பார்க்க

"அலங்காரத்திற்காக மாநில கல்விக் கொள்கை என்று நாடகமாடுகிறது திமுக" - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில கல்விக்கொள்கையை இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் இதனை விமர்சித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்க... மேலும் பார்க்க

"முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?" - அமைச்சர் துரைமுருகன்

வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் பாஜக மீது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில், ... மேலும் பார்க்க

பாகிஸ்தான், இஸ்ரேல் வரிசையில் கம்போடியா - ட்ரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரை - காரணம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு, 'நோபல் பரிசு ஆசை' ரொம்பவே வந்துவிட்டது என்று கூறலாம். பாகிஸ்தான் ஆரம்பித்த ஒன்று! இந்தத் தீயை முதன்முதலில் பற்ற வைத்த... மேலும் பார்க்க

ராமதாஸ், அன்புமணி தனது அறையில் ஆஜராக சொல்லும் நீதிபதி! - இன்று மாலை நடக்குமா அந்த சந்திப்பு?

பாமக-வில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இருவர் தரப்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழ... மேலும் பார்க்க

`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?’ - சீமான் காட்டம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒ... மேலும் பார்க்க