செய்திகள் :

தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய அரசு!

post image

இந்தியாவின் 11 மாநிலங்களில், 2025 ஆம் ஆண்டு துவங்கியது முதல், 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், நாட்டில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கைக் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல், இன்று (ஆக.8) எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

”நாட்டில் ஏற்படும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலின் பாதிப்புகளை, மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் தேசிய நோய்கிருமிகளால் பரவும் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

இதில், கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டிலும், 2025-ம் ஆண்டின் ஜூன் 30 ஆம் தேதி வரை குறைவான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

அசாம், பிகார், ஜார்க்கண்ட், கர்நாடகம், மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 11 மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் மூலம் நிகழாண்டில் (2025) மொத்தம் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில், அதிகப்படியாக அசாமில் 127 பாதிப்புகள் பதிவான நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மிகவும் குறைவாக 2 பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், 2020 ஆம் ஆண்டில் 729 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2021-ல் 787 பாதிப்புகளும், 2022-ல் 1,109 பாதிப்புகளும், அதிகப்படியாக 2024-ல் 1,472 பாதிப்புகளும் உறுதியாகியுள்ளன.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தர்மஸ்தலா விவகாரம்: ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

The central government informed Parliament that 224 cases of Japanese encephalitis have been confirmed in 11 states of India since the beginning of 2025.

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.PM Modi dials Putin, discusses Ukraine war, invites him to India மேலும் பார்க்க

ராகுல் vs தேர்தல் ஆணையம்! வாக்குத் திருட்டு விவகாரத்தில் அடுக்கடுக்கான கேள்விகள்!

மகாராஷ்டிரம் உள்ளிட்ட பேரவைத் தேர்தல்களில் வாக்குத் திருட்டு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு ந... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளேன்: தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் பதில்

நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். மக்களவைத் தோ்தலில் நடந்ததாக கூறப்படும் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்ப... மேலும் பார்க்க

வருமான வரி மசோதா: மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றார் நிர்மலா சீதாராமன்

புது தில்லி: புதிய வருமான வரி மசோதா 2025-ஐ மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்... மேலும் பார்க்க

தர்மஸ்தலா விவகாரம்: ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

புது தில்லி: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா தொடர்பாக தற்போது எழுந்திருக்கும் விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் செய்தி சேகரிப்பதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால்... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா பிரச்னை! பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்க நெதன்யாகு வருகை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகைதர இருப்பதாகக் கூறியுள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் ... மேலும் பார்க்க