செய்திகள் :

தர்மஸ்தலா விவகாரம்: ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா தொடர்பாக தற்போது எழுந்திருக்கும் விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் செய்தி சேகரிப்பதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஊடகங்கள் செய்தி சேகரிக்கத் தடை விதிக்க மறுத்துவிட்டாலும், கோவிலை நிர்வகிக்கும் குடும்பத்தை குறிவைத்து அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டி, தர்மஸ்தலா கோயிலின் செயலாளர் தாக்கல் செய்த மனுவை, கர்நாடகத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்றியிருக்கிறார்கள்.

மிகவும் அரிதிலும் அரிதான வழக்குகளிலேயே, உச்ச நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றும், மனுதாரர், தனது குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து விவரங்களையும் விசாரணை நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் மன்மோகன் அமர்வு.

தர்மஸ்தலா தொடர்பான செய்திகளை வெளியிடுவதைத் தடைசெய்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை ஆகஸ்ட் 1-ஆம் தேதி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், தர்மஸ்தலா தொடர்பாக வெளியாகும் விவகாரங்கள் குறித்து செய்திகள் வெளியிட கோயில் நிர்வாக செயலாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிவில் நீதிமன்றம், ஊடகங்கள் செய்தி வெளியிட தடை விதித்திருந்தது. மனுதாரர் தரப்பில், கோயிலுக்கு எதிரான உள்ளடக்கங்களைக் கொண்ட 8,000 யூடியூப் சேனல்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை ரத்து செய்த நிலையில், ஊடகங்கள் செய்தி வெளியிட உச்ச நீதிமன்றம் மறுத்து, விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியிருக்கிறது.

The Supreme Court on Friday refused to gag media from reporting on the Dharmasthala mass burial case in Karnataka.

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.PM Modi dials Putin, discusses Ukraine war, invites him to India மேலும் பார்க்க

ராகுல் vs தேர்தல் ஆணையம்! வாக்குத் திருட்டு விவகாரத்தில் அடுக்கடுக்கான கேள்விகள்!

மகாராஷ்டிரம் உள்ளிட்ட பேரவைத் தேர்தல்களில் வாக்குத் திருட்டு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு ந... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளேன்: தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் பதில்

நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். மக்களவைத் தோ்தலில் நடந்ததாக கூறப்படும் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்ப... மேலும் பார்க்க

வருமான வரி மசோதா: மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றார் நிர்மலா சீதாராமன்

புது தில்லி: புதிய வருமான வரி மசோதா 2025-ஐ மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்... மேலும் பார்க்க

தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய அரசு!

இந்தியாவின் 11 மாநிலங்களில், 2025 ஆம் ஆண்டு துவங்கியது முதல், 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகள... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா பிரச்னை! பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்க நெதன்யாகு வருகை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகைதர இருப்பதாகக் கூறியுள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் ... மேலும் பார்க்க