செய்திகள் :

கஃபேக்களில் மட்டும் கிடைக்கும் வைஃபை - மொபைல் இணைய வசதியில்லாத நாடு பற்றி தெரியுமா?

post image

இன்றைய டிஜிட்டல் உலகில், இணையம் இல்லாமல் ஒரு நாளைக் கழிப்பது பலருக்கு கற்பனை செய்ய முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த மொபைல் இணைய வசதி, சமூக ஊடகங்கள் மற்றும் ஏடிஎம் வசதிகள் இல்லாத ஒரு விசித்திரமான நாடு இந்த பூமியில் இன்னும் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? எங்கே இருக்கிறது அந்த நாடு என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எரித்திரியா என்ற நாட்டில், தான் மொபைல் இணைய சேவை வசதிகள் இல்லை. எரித்திரியா கிட்டதட்ட உலகின் மிக ரகசியமான நாடாகவே உள்ளது.

சர்வாதிகார ஆட்சி காரணமாக, குடிமக்கள் கட்டாய இராணுவ சேவையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் எரித்திரியா பெரும்பாலும் "ஆப்பிரிக்காவின் வடகொரியா" என்று அழைக்கப்படுகிறது.

மொபைல் இணைய வசதி இல்லாத ஒரே நாடு

எரித்திரியாவில் மொபைல் டேட்டா சேவை இல்லை, மக்கள் வீடுகளில் இணையத்தைப் பயன்படுத்த வழியில்லை. நாடு முழுவதும் பரவலாக உள்ள சில கஃபேக்களில் மட்டுமே இணைய பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த கஃபேக்களில் மக்கள் தங்கள் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி வை-ஃபை மூலம் இணையத்தை அணுகுகின்றனர்.

அதிலும் ஒரு மணி நேர வை-ஃபை வசதிக்கு சுமார் 100 எரித்திரிய நக்ஃபா (இந்திய மதிப்பில் 100 ரூபாய்) செலவாகுமாம். அதிலும் இணைய சேவை அங்கு மெதுவாகதான் இருக்கும் என்பதால் அதன் பயன்பாடும் குறைவாகவே உள்ளது.

``நாலைஞ்சு தலைமுறையா பாதையோர வாசிதான்'' - கானா பாடகர் மெட்ராஸ் மிரன்

ஒரு மனிதனின் அடிப்படை தேவைகள் என்னென்ன என்ற கேள்விக்கு, உணவு, உடை, இருப்பிடம் என பள்ளிக்கூடத்தில் பதிலளித்திருப்போம். ஆனால், அவை பல தலைமுறைகளாக கிடைக்கப்பெறாத மக்களும் நமக்கு நடுவே பாதையோரங்களில் வாழ்... மேலும் பார்க்க

விமானப் பயணத்தில் செல்போனை Airplane Modeல் வைப்பது ஏன் அவசியம்? விமானியின் விளக்கம்

விமானப் பயணத்தின்போது செல்போன்களை ஏரோபிளேன் மோடில் வைப்பது மிகவும் முக்கியமானது என ஒரு விமானி தெளிவாக விளக்கியுள்ளார். விமானி ஒருவர் டிக்டாக்கில் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறார். சொல்போனை ஏரோபிளேன்... மேலும் பார்க்க

எல்லோர் மனதிலும் பரவச அலைகளை ஏற்படுத்திய சதாபிஷேக கல்யாணம்! | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரமாண்ட தூண், கம்பீரமாக காட்சியளிக்கும் திருமலை நாயக்கர் அரண்மனை.. |Photo Album

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர் அரண்மனைஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர் அரண்மனை மேலும் பார்க்க

புதுச்சேரி: பிரெஞ்சு ஒற்றுமையை பறைசாற்றும் ராஜா பண்டிகை

வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள்வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள்வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள்வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள்வண்ண விள... மேலும் பார்க்க