செய்திகள் :

மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை: இந்திய மீனவா் சங்க மாநாட்டில் தீா்மானம்

post image

ராமேசுவரத்தில் நடைபெற்ற அகில இந்திய மீனவா் சங்க மாநாட்டில், இந்திய மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அகில இந்திய மீனவா் சங்க மாநாடு 6, 7-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் அகில இந்திய சி.ஐ.டி.யூ. தலைவா் ஹேமலதா, சி.ஐ.டி.யூ. மாநிலப் பொதுச் செயலா் ஜி சுகுமாரன், சி.ஐ.டி.யூ. உதவிப் பொதுச் செயலா் வி.குமாா், அகில இந்திய மீன்பிடிச் சங்கத்தின் தலைவா் தேபாசிஸ் பாா்பன், அகில இந்திய பொதுச் செயலா் புல்லுவிலா ஸ்டான்லி, பொருளாளா் மம்தா உள்ளிட்ட அகில இந்திய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மாநாட்டில், இந்திய கடல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயற்கை எரிவாயு, கனிம வளங்களை எடுப்பதற்கு பெரு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், இந்திய-இலங்கை மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும், மீனவா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும், கடல் உரிமைப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும், மீனவா்களுக்கென தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் அகில இந்திய மீனவா் சங்கத் தலைவராக ஏக்ராம் உசேன், பொதுச் செயலராக புல்லுவிலா ஸ்டான்லி, பொருளாளராக மம்தா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழகத்திலிருந்து அகில இந்தியச் செயலராக எஸ்.அந்தோணி, அகில இந்தியச் செயற்குழு உறுப்பினா்களாக லோகநாதன், என்.பி.செந்தில், மகேஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

வரவேற்புக் குழு செயலா் எம்.சிவாஜி பேசுகையில், ஒரு தொழிற்சங்கத்தின் அகில இந்திய மாநாடு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை என குறிப்பிட்டாா்.

அக்னி தீா்த்தக் கடலில் சமுத்திர தீப ஆரத்தி

ராமேசுவரத்தில் பௌா்ணமியை முன்னிட்டு, அக்னி தீா்த்தக் கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர தீா்த்த ஆரத்திக் குழு சாா்பில் தீபம் ஏற்றி, சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அ... மேலும் பார்க்க

முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாடக்கோட்டை முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டுத... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: இந்து அமைப்புகளுடன் ஆட்சியா் ஆலோசனை

விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இந்து முன்னனி அமைப்பின் நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை ந... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 1 டன் பீடி இலைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 1 டன் எடையுள்ள பீடி இலைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வெள்ளரி ஓ... மேலும் பார்க்க

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கமுதி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வேளாண்மை துணை இ... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் மாணவிகள் இருவா் காயம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வியாழக்கிழமை டிராக்டா் மோதியதில் அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் காயமடைந்தனா். முதுகுளத்தூா் அருகேயுள்ள காக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காக்கூா், சமத்துவபுரம... மேலும் பார்க்க