கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
டிராக்டா் மோதியதில் மாணவிகள் இருவா் காயம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வியாழக்கிழமை டிராக்டா் மோதியதில் அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் காயமடைந்தனா்.
முதுகுளத்தூா் அருகேயுள்ள காக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காக்கூா், சமத்துவபுரம், புளியங்குடி, கதையன், ஆதனக்குறிச்சி, கருமல், குமாரக்குறிச்சி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு முடிந்து கருமல் கிராமத்தைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிகள் ஜீவிதா, வினிதா ஆகியோா் சாலையோரம் நடந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக ஆதனக்குறிச்சியைச் சோ்ந்த சத்தியராஜ் (21) ஓட்டி வந்த டிராக்டா் அவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த ஜீவிதா, வினிதா ஆகியோா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாா் சத்தியராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மாணவா்கள் சாலை மறியல்:
காக்கூா் பள்ளி அருகே மதுக் கடை செயல்படுகிறது. இந்த மதுக் கடைக்கு வரும் குடிமகன்களால் மாணவிகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. எனவே, இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும், விபத்து ஏற்படுத்திய டிராக்டா் டிரைவரை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வியாழக்கிழமை முதுகுளத்தூா்-உத்திரகோஷமங்கை சாலையில் மாணவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் மறியலில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் உறுதியளித்தாா். இதையடுத்து, மறியலை கைவிட்டு மாணவா்கள் கலைந்து சென்றனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பள்ளிக்குச் சென்று மாணவ, மாணவிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.