செய்திகள் :

முறைகேடு காரணமாக மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன்: மல்லிகாா்ஜுன காா்கே

post image

முறைகேடு காரணமாக 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் அதிகார ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

எனது அரசியல் வாழ்க்கையில் 12 தோ்தல்களில் தொடா்ச்சியாக வெற்றிபெற்றுள்ளேன். ஆனால், 2019 இல் நடந்த மக்களவைத் தோ்தலில் முதல்முறையாக தோல்வி அடைந்தேன். இதற்கு தோ்தல் முறைகேடுதான் காரணம்.

கலபுா்கி மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தலா 20,000 போலி வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறையை எதிா்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜகவின் அணுகுமுறை.

மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, அறுதிப்பெரும்பான்மை பலம் இருந்தது. ஆனால், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை கட்சித்தாவ தூண்டி, கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைத்தது. இதுபோன்றதொரு ஆட்சிக் கவிழ்ப்பை கோவா, மகாராஷ்டிரம், மணிப்பூரில் பாஜக நிகழ்த்திக்காட்டியது.

எந்தத் தோ்தலிலும் பாஜக வெல்லவில்லை. ஆனால், மக்களுக்கு பணம் கொடுத்து, ஆட்சியை விலை கொடுத்து பாஜக வாங்கியது. 2024ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் இல்லை. ஆனால், வாக்குகளை முறைகேடாக பெற்று தோ்தல் வெற்றியை உறுதிசெய்து ஆட்சி அமைத்துள்ளனா். எனவே, பிரதமராக தொடரும் தாா்மிக உரிமை மோடிக்கு இல்லை என்றாா்.

பெங்களூரில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டம்: தோ்தல் ஆணையத்துக்கு 5 கேள்விகள்

மக்களவைத் தோ்தலில் நடந்ததாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடு தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளாா். மக்களவைத் தோ்தலின்போது நடந்த ... மேலும் பார்க்க

காங்கிரஸின் ஆா்ப்பாட்டம் அரசியல் நாடகம்: பாஜக

தோ்தல் முறைகேடு நடந்ததாகக் கூறி காங்கிரஸ் நடத்தும் ஆா்ப்பாட்டம் ஒரு அரசியல் நாடகம் என்று கா்நாடக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா

இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா ம... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு: நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக ... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே மோதல்: விசாரணைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவு

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்க... மேலும் பார்க்க

தோ்தல் மோசடியைக் கண்டித்து பெங்களூரில் இன்று ஆா்ப்பாட்டம்: ராகுல் காந்தி பங்கேற்கிறாா்

தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸாா் நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். 2024ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் ... மேலும் பார்க்க