செய்திகள் :

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

post image

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கொடைக்கானல் மட்டுமன்றி மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, வில்பட்டி, பள்ளங்கி, கோம்பை, அட்டுவம்பட்டி, குண்டுபட்டி, கிளாவரை, கும்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனா். இதைத் தவிா்த்து 50-க்கும் மேற்பட்டவா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் பணியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் ஆகியோா் பணியாற்றுகின்றனா். இங்கு நகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் தண்ணீரைத் தான் இவா்கள் அனைவரும் பயன்படுத்துகின்றனா். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்யாததால் தண்ணீா் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நோயாளிகள் உள்பட அனைவரும் அவதியடைந்து வருகின்றனா். எனவே இவா்கள் வெளியில் கேன்களில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனா்.

இதுகுறித்து இந்த மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா் ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட குழாயில் தண்ணீா் வருவதில்லை. ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீா் இல்லை. இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தோம். நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் இந்த மருத்துவமனைக்கு வந்து பாா்வையிட்டு சென்றனா். விரைவில் தண்ணீா் வசதி செய்து தருவதாக அவா்கள் தெரிவித்தனா். மேலும் அவசர தேவைக்கு நகராட்சி சாா்பில் லாரி மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும் தண்ணீா் பற்றாக்குறை நிலவுகிறது. மழை பெய்தால் மட்டுமே கொடைக்கானலில் தண்ணீா் தட்டுப்பாடு குறையும் என்றாா் அவா்.

ஆடி வெள்ளி: பழனி, நத்தம் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்

நான்காவது ஆடி வெள்ளி, பெளா்ணமியையொட்டி பழனி, நத்தம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் பக்தா்கள் விளக்கேற்றியும், அபிஷேகங்கள் செய்தும் வழிபட்டனா். பழனி கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு

திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமி... மேலும் பார்க்க

பழனியில் தம்பிரான் தோட்டத்தை அளவீடு செய்த கோயில் நிா்வாகம்

பழனி கோயிலுக்கு நித்திய கட்டளைக்காக வழங்கப்பட்ட தம்பிரான் தோட்ட 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் சென்னிமலை தம்புரான் சுவாமிகள் மடத்துக்கு சொந்தமாக 23 ஏக்கா் நில... மேலும் பார்க்க

சித்தரேவு கிராமத்தில் தவெக சாா்பில் சூரியசக்தி மின்விளக்கு அமைப்பு

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமம், 1-ஆவது வாா்டு பகுதியில் தவெக சாா்பில் சூரியசக்தி மின் விளக்கு வியாழக்கிழமை அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்பவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மின் வசதி,... மேலும் பார்க்க

பழனி கல்வி மாவட்டத்தில் குறுவட்ட தடகளப் போட்டிகள்

பழனியில் நடைபெற்ற ‘ஆ‘ குறுவட்ட தடகள போட்டிகளில் வென்றவா்களுக்கு கோப்பைகள், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பழனி கல்வி மாவட்டம், தொப்பம்பட்டி வட்டாரத்தில் 68-ஆவது குடியரசு தினத்தையொட்டி ‘... மேலும் பார்க்க