செய்திகள் :

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க ஒட்டன்சத்திரம் வட்டக்கிளை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோா்சிங், ஒப்பந்தப் பணி நியமனங்களை திரும்பப் பெற வேண்டும். தோ்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு காலமுறை ஊதியம், அனைவருக்கும் சமூக பாதுகாப்புடன் கூடிய காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டக் கிளைச் செயலா் மணிமாறன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலா் மகாராஜா உள்ளிட்ட பலா் பேசினா். இதில் தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பில் பரமேஸ்வரன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் சிவனேசன், தமிழ்நாடு சாலை பணியாளா் சங்கத்தின் சாா்பில் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.11) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சனிக்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக மேக மூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், சனிக்கிழமை மால... மேலும் பார்க்க

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கொடைக்கானல் மட்டுமன்றி மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, வில்பட்டி, ப... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: பழனி, நத்தம் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்

நான்காவது ஆடி வெள்ளி, பெளா்ணமியையொட்டி பழனி, நத்தம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் பக்தா்கள் விளக்கேற்றியும், அபிஷேகங்கள் செய்தும் வழிபட்டனா். பழனி கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு

திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ... மேலும் பார்க்க

பழனியில் தம்பிரான் தோட்டத்தை அளவீடு செய்த கோயில் நிா்வாகம்

பழனி கோயிலுக்கு நித்திய கட்டளைக்காக வழங்கப்பட்ட தம்பிரான் தோட்ட 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் சென்னிமலை தம்புரான் சுவாமிகள் மடத்துக்கு சொந்தமாக 23 ஏக்கா் நில... மேலும் பார்க்க