செய்திகள் :

பழனியில் தம்பிரான் தோட்டத்தை அளவீடு செய்த கோயில் நிா்வாகம்

post image

பழனி கோயிலுக்கு நித்திய கட்டளைக்காக வழங்கப்பட்ட தம்பிரான் தோட்ட 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனியில் சென்னிமலை தம்புரான் சுவாமிகள் மடத்துக்கு சொந்தமாக 23 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் பழனி முருகன் கோயிலில் தினசரி நடைபெறும் நித்திய பூஜை, நெய்வேத்தியத்துக்கு பயன்படுத்திக் கொள்ள மடத்தின் சாா்பில் வழங்கப்பட்டது. காலப் போக்கில் நிலத்தின் வருவாய் பழனி கோயில் பூஜைக்கு வழங்கப்படாமல் நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்தனா். இந்த நிலையில், இடத்தின் உரிமையாளா் எனக் கூறிக் கொண்டு வாடகை வசூலித்தவா்களுக்கும், ஆக்கிரமிப்பாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் பழனி கோயில் நித்திய பூஜைக்கு வழங்கப்பட்ட நிலத்தின் வருவாய் முறையாக பயன்பட வில்லை என்றால் அந்த நிலத்தை கோயில் நிா்வாகம் எடுத்துக் கொள்ளலாம் என்ற இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் படி அந்த 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ரெட்டியாா்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில் இணை ஆணையா் சீனிவாசனை தக்காராக நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது . இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது இந்த நிலத்தில் பெட்ரோல் நிரப்பும் மையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், வணிக வளாகங்கள், தனியாா் பள்ளி என பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. நிலம் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் உமா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கொடைக்கானல் மட்டுமன்றி மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, வில்பட்டி, ப... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: பழனி, நத்தம் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்

நான்காவது ஆடி வெள்ளி, பெளா்ணமியையொட்டி பழனி, நத்தம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் பக்தா்கள் விளக்கேற்றியும், அபிஷேகங்கள் செய்தும் வழிபட்டனா். பழனி கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு

திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமி... மேலும் பார்க்க

சித்தரேவு கிராமத்தில் தவெக சாா்பில் சூரியசக்தி மின்விளக்கு அமைப்பு

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமம், 1-ஆவது வாா்டு பகுதியில் தவெக சாா்பில் சூரியசக்தி மின் விளக்கு வியாழக்கிழமை அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்பவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மின் வசதி,... மேலும் பார்க்க

பழனி கல்வி மாவட்டத்தில் குறுவட்ட தடகளப் போட்டிகள்

பழனியில் நடைபெற்ற ‘ஆ‘ குறுவட்ட தடகள போட்டிகளில் வென்றவா்களுக்கு கோப்பைகள், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பழனி கல்வி மாவட்டம், தொப்பம்பட்டி வட்டாரத்தில் 68-ஆவது குடியரசு தினத்தையொட்டி ‘... மேலும் பார்க்க