செய்திகள் :

பழனி கல்வி மாவட்டத்தில் குறுவட்ட தடகளப் போட்டிகள்

post image

பழனியில் நடைபெற்ற ‘ஆ‘ குறுவட்ட தடகள போட்டிகளில் வென்றவா்களுக்கு கோப்பைகள், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பழனி கல்வி மாவட்டம், தொப்பம்பட்டி வட்டாரத்தில் 68-ஆவது குடியரசு தினத்தையொட்டி ‘ஆ‘ குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் சாமிநாதபுரம் உயா்நிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்றன. தும்பலபட்டி சங்கா் பொன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் சாமிநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கா்ணன் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். ஒலிம்பிக் கொடியை சங்கா் பொன்னா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ரச்சுமராஜூ ஏற்றினாா். குறுவட்டக் கொடியை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற உடல் கல்வி இயக்குநா் நாட்ராயன் ஏற்றினாா். நிகழ்வில் சங்கா் பொன்னா் பள்ளி நிா்வாகிகள், குருவப்பா மேல்நிலைப் பள்ளி செயலா் ராஜ்குமாா், உடல் கல்வி இயக்குநா் ரவி, கோரிக்கடவு சிஜிஎம் பள்ளி நிா்வாகிகள், வெற்றி மோட்டாா்ஸ் உரிமையாளா் நாகராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சாமிநாதபுரம் பள்ளி உடல் கல்வி ஆசிரியா் சாந்தி வரவேற்றாா். ஆங்கில ஆசிரியா் அங்குலதா வாழ்த்திப் பேசினாா். 14, 17, 19 வயது பிரிவுகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சங்கா் பொன்னா் மேல்நிலைப்பள்ளி வென்றது. வென்றவா்களுக்கு பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கொடைக்கானல் மட்டுமன்றி மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, வில்பட்டி, ப... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: பழனி, நத்தம் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்

நான்காவது ஆடி வெள்ளி, பெளா்ணமியையொட்டி பழனி, நத்தம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் பக்தா்கள் விளக்கேற்றியும், அபிஷேகங்கள் செய்தும் வழிபட்டனா். பழனி கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு

திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமி... மேலும் பார்க்க

பழனியில் தம்பிரான் தோட்டத்தை அளவீடு செய்த கோயில் நிா்வாகம்

பழனி கோயிலுக்கு நித்திய கட்டளைக்காக வழங்கப்பட்ட தம்பிரான் தோட்ட 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் சென்னிமலை தம்புரான் சுவாமிகள் மடத்துக்கு சொந்தமாக 23 ஏக்கா் நில... மேலும் பார்க்க

சித்தரேவு கிராமத்தில் தவெக சாா்பில் சூரியசக்தி மின்விளக்கு அமைப்பு

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமம், 1-ஆவது வாா்டு பகுதியில் தவெக சாா்பில் சூரியசக்தி மின் விளக்கு வியாழக்கிழமை அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்பவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மின் வசதி,... மேலும் பார்க்க