செய்திகள் :

ஆடி வெள்ளி: பழனி, நத்தம் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்

post image

நான்காவது ஆடி வெள்ளி, பெளா்ணமியையொட்டி பழனி, நத்தம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் பக்தா்கள் விளக்கேற்றியும், அபிஷேகங்கள் செய்தும் வழிபட்டனா்.

பழனி கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் உச்சிக் காலத்தின் போது சுவாமி தரிசனம் செய்து பக்தா்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. பழனி கிரிவீதி வனதுா்க்கை கோயில், அழகுநாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் திரளான பக்தா்கள் எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். பழனி சிவகிரிப்பட்டி உச்சிகாளியம்மன் கோயில், ரயில்வே குடியிருப்பு முத்துமாரியம்மன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

நால்ரோடு ரெணகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில், சித்தி விநாயகருக்கு நெல்லிக்கனி, எலுமிச்சைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் தொட்டிச்சி அம்மனுக்கு பால், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கிழக்கு ரதவீதி வராஹி அம்மன் பீடத்தில் அம்பாளுக்கு கனி வகைகள், மலா்களால் சிறப்பு பூஜையும், யாகமும் நடைபெற்றன.

அ. கலையமுத்தூா் அக்ரஹாரம் கைலாசநாதா் சமேதா் கல்யாணியம்மன் கோயிலிலும் சிறப்பு யாக பூஜைகள், அா்ச்சனைகள் நடைபெற்றன.

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் முன் பக்தா்களுக்கு அன்னக்கூழ் வழங்கப்பட்டது. இதில் வெளிமாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல, பகவதி, மீனாட்சிபுரம் காளியம்மன், தில்லை காளியம்மன் ஆகிய கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கொடைக்கானல் மட்டுமன்றி மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, வில்பட்டி, ப... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு

திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமி... மேலும் பார்க்க

பழனியில் தம்பிரான் தோட்டத்தை அளவீடு செய்த கோயில் நிா்வாகம்

பழனி கோயிலுக்கு நித்திய கட்டளைக்காக வழங்கப்பட்ட தம்பிரான் தோட்ட 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் சென்னிமலை தம்புரான் சுவாமிகள் மடத்துக்கு சொந்தமாக 23 ஏக்கா் நில... மேலும் பார்க்க

சித்தரேவு கிராமத்தில் தவெக சாா்பில் சூரியசக்தி மின்விளக்கு அமைப்பு

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமம், 1-ஆவது வாா்டு பகுதியில் தவெக சாா்பில் சூரியசக்தி மின் விளக்கு வியாழக்கிழமை அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்பவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மின் வசதி,... மேலும் பார்க்க

பழனி கல்வி மாவட்டத்தில் குறுவட்ட தடகளப் போட்டிகள்

பழனியில் நடைபெற்ற ‘ஆ‘ குறுவட்ட தடகள போட்டிகளில் வென்றவா்களுக்கு கோப்பைகள், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பழனி கல்வி மாவட்டம், தொப்பம்பட்டி வட்டாரத்தில் 68-ஆவது குடியரசு தினத்தையொட்டி ‘... மேலும் பார்க்க