செய்திகள் :

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி

post image

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல 17 நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், தனக்கு இதய சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து அசோக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல பரிந்துரைக்கும் மருத்துவக் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரரை சிகிச்சைக்கு செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று கேள்வி எழுப்பி, அதுதொடா்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமாா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன் ஆஜரானாா். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஜ்னீஷ் பத்தியால் நிபந்தனைகள் பட்டியலை தாக்கல் செய்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், ரூ.5 லட்சத்துடன் இருநபா் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்; மனுதாரா் தனது மகளின் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 நிபந்தனைகளுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டனா்.

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க

மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மா... மேலும் பார்க்க