செய்திகள் :

``கபில் சர்மாவின் மும்பை ரெஸ்டாரண்ட் மீதும் தாக்குவோம்'' - மிரட்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க்

post image

கனடாவின் சுர்ரே என்ற இடத்தில் காமெடி நடிகர் கபில் சர்மாவிற்கு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. இந்த ரெஸ்டாரண்ட் மீது ஏற்கெனவே கடந்த மாதம் 10-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இத்துப்பாக்கிச்சூட்டிற்கு காலிஸ்தான் தீவிரவாதி ஹர்ஜீத் சிங் பொறுப்பு ஏற்று இருந்தார். கபில் சர்மாவின் காமெடி ஷோவில் சீக்கியர்களின் பாரம்பரிய உடை மற்றும் அவர்களின் நடத்தை குறித்து ஒருவர் தவறாக பேசியதால் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இப்போது மீண்டும் `கேப்ஸ் கபே' என்ற அந்த ரெஸ்டாரண்ட் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இம்முறையும் இரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ரெஸ்டாரண்ட் மீது சரமாரியாக சுட்டனர். மொத்தம் 25 தோட்டாக்கள் ரெஸ்டாரண்ட் மீது சுடப்பட்டது.

கபில் சர்மா, லாரன்ஸ் பிஷ்னோய்

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து கேள்விப்பட்டதும் கனடா போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் அது குறித்து போலீஸார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இத்துப்பாக்கிச்சூட்டிற்கு நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு காரணமாக இருந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டம் பொறுப்பு ஏற்றுள்ளது.

இது தொடர்பாக அந்த கேங்க் வெளியிட்டுள்ள சமூக ஊடக செய்தியில்,''நாங்கள் இலக்கு வைத்திருந்த நபரை வெளியில் அழைத்தோம். வரவில்லை. எனவே செயலில் இறங்கினோம். எங்களது பேச்சை கேட்கவில்லையெனில் அடுத்த தாக்குதல் மும்பையில் நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

Actor Kapil Sharma's Canada restaurant

இது தவிர கோல்டி தில்லான் கேங்கும் இத்துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பு ஏற்பதாக சமூக ஊடங்களில் தகவல் தெரிவித்துள்ளது. மும்பையில் தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்து இருப்பதால் அது குறித்து கவனத்தில் கொண்டுள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் ஏற்கனவே பஞ்சாப் பாடகர் சிது முஸ்வாலாவை சுட்டுக்கொலை செய்தனர். தற்போது அவருக்கு ஹரியானா மாநிலம் தப்வாலி என்ற இடத்தில் சிலை வைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலை மீது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறது. இதனை சிது மூஸ்வாலாவின் தாயார் வன்மையாக கண்டித்துள்ளார். இது போன்று சிலை வைப்பவர்களை எச்சரிக்கை செய்யவே இது போன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் தெரிவித்துள்ளது.

`ஆபாச காட்சிகள்' - ஸ்வேதா மேனன் மீது FIR பதிவு; நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்த ஐகோர்ட்

மலையாள சினிமா நடிகை ஸ்வேதா மேனன் ஆபாச காட்சிகளில் நடித்ததாகவும், பணத்துக்காக விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து மார்ட்டின் மேனாச்சேரி என்பவர் காவல் நிலைய... மேலும் பார்க்க

டூவிலரில் வீடியோ எடுத்துக் கொண்டே 25 தெருநாய்களை சுட்டுக்கொன்ற நபர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் தெருநாய்களை மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற படி வீடியோ எடுத்துக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க... மேலும் பார்க்க

`ரூ.1 கோடி கொடுக்காவிட்டால் சாகும் வரை சிறை'- காதலனை மிரட்டிய மும்பை வங்கி பெண் அதிகாரி கைது!

மும்பையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் டோல்லி கோடக். இவர் தனது சகோதரன் மற்றும் தன்னுடன் பணியாற்றிய வங்கி ஊழியர்களின் துணையோடு தனது காதலனை மிரட்டி ஒரு கோடி பணம் கேட்டுள்ளார். டோல்லி கோடக்க... மேலும் பார்க்க

ஊட்டி: ஹோட்டல் குளியலறை சுவரில் ஃபிளாஷ் லைட்; பதறிய பெண்; விசாரணையில் பகீர் தகவல்; என்ன நடந்தது?

ஊட்டியில் கோடை‌ சீசன் நிறைவடைந்திருந்தாலும், தற்போது நிலவி வரும் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கேரளா மாநிலத்தைச்‌‌ சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந... மேலும் பார்க்க

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை வழக்கு: முக்கியக் குற்றவாளி என்கவுன்டர்; இருவர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய கர்நாடக இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வலை விரித்து 26 பவுன் நகைகளை அபகரித்துச் சென்ற லிபின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர... மேலும் பார்க்க