செய்திகள் :

டெல்லி: வாகனங்களை நிறுத்துவதில் தகராறு - பாலிவுட் நடிகை ஹுமா குரேஷின் சகோதரர் படுகொலை

post image

பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆசிப் குரேஷி, டெல்லி நிஜாமுதின் பகுதியில் வசித்து வந்தார். ஆசிப் குரேஷி வீட்டிற்கு வெளியில் பக்கத்து வீட்டுக்காரர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அந்த வாகனத்தை அங்கிருந்து எடுக்கும்படி பக்கத்து வீட்டுக்காரரிடம் ஆசிப் கேட்டுக்கொண்டார்.

இதனால் ஆசிப்பிற்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பக்கத்து வீட்டுக்காரர் தன்னிடம் இருந்த கூரிய ஆயுதத்தால் ஆசிப்பை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆசிப் சுருண்டு விழுந்தார். அவரை அவரது மனைவி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்.

இருவருக்கும் இடையே இதற்கு முன்பும் இதே போன்ற வாகன பார்க்கிங் பிரச்னையில் தகராறு ஏற்பட்டு இருந்தது. இதனால் இருவரும் சரியாக பேசிக்கொள்வதில்லை. இது குறித்து ஆசிப் மனைவி சாய்னாஸ் குரேஷி கூறுகையில், ''சிறிய பிரச்னையில் எனது கணவரை பக்கத்து வீட்டுக்காரர் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் எங்களது வீட்டுக்கு வெளியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அதனை அங்கிருந்து எடுக்கும்படி படி எனது கணவர் கேட்டுக்கொண்டார். ஆனால் வாகனத்தை எடுப்பதற்கு பதில் எனது கணவரை பக்கத்து வீட்டுக்காரரும், அவரது நண்பரும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அதோடு அவரை தாக்கி கூரிய ஆயுதத்தால் தாக்கினார்''என்று தெரிவித்தார்.

ஆசிப்பை தாக்கிய இருவர் அங்கிருந்து தப்பி தலைமறைவானார்கள். அவர்களை போலீஸார் தேடி கண்டுபிடித்து கைது செய்து என்ன காரணத்திற்காக கொலை செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். வடமாநிலங்களில் அடிக்கடி பார்க்கிங் பிரச்னை மற்றும் லிப்டில் ஏறுவது தொடர்பான பிரச்னையில் மோதல் ஏற்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`திருமணம், நட்பு, ஆபாச மெசேஜ்' - Facebook -ல் பழகிய பெண்களிடம் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

சைபர் கிரிமினல்கள் அடிக்கடி பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பணமோசடி புகார் அல்லது திருமண ஆசை என எதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் பறிக்கின்றனர். அதிகமான நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் ம... மேலும் பார்க்க

அந்தியூர் குதிரை சந்தை: மர்மமான முறையில் இறந்த 6 குதிரைகள்; பிரேதப் பரிசோதனை முடிவு சொல்வது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.ஆண்டுதோறும் ஆடி மாதம் குருநாதசுவாமி கோவிலின் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும்... மேலும் பார்க்க

"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம்

திமுக ஆட்சியில் நடந்த 19 போலி மோதல் சம்பவங்களில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.SSI சண்முகவேல்தியாகு ஒருங்கிணைப்பாளராகவ... மேலும் பார்க்க

``கபில் சர்மாவின் மும்பை ரெஸ்டாரண்ட் மீதும் தாக்குவோம்'' - மிரட்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க்

கனடாவின் சுர்ரே என்ற இடத்தில் காமெடி நடிகர் கபில் சர்மாவிற்கு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. இந்த ரெஸ்டாரண்ட் மீது ஏற்கெனவே கடந்த மாதம் 10-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இத்துப்பாக்கிச்சூட்டிற்கு கா... மேலும் பார்க்க

`ஆபாச காட்சிகள்' - ஸ்வேதா மேனன் மீது FIR பதிவு; நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்த ஐகோர்ட்

மலையாள சினிமா நடிகை ஸ்வேதா மேனன் ஆபாச காட்சிகளில் நடித்ததாகவும், பணத்துக்காக விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து மார்ட்டின் மேனாச்சேரி என்பவர் காவல் நிலைய... மேலும் பார்க்க

டூவிலரில் வீடியோ எடுத்துக் கொண்டே 25 தெருநாய்களை சுட்டுக்கொன்ற நபர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் தெருநாய்களை மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற படி வீடியோ எடுத்துக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க... மேலும் பார்க்க