அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
மீண்டும் சீரியல்; வைரலாகும் சம்பளம் விவரம்; "அதிக சம்பளத்திற்குக் காரணம் இருக்கு" - ஸ்மிருதி இரானி
முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார். அந்தத் தொடருக்காக அவர் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
டி.வி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் பாஜக-வைச் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி. அரசியலில் களம் இறங்கிய இவர் பாஜக ஆட்சியில் 2014 முதல் 2024 வரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகவும், தொழில், ஜவுளி துறை அமைச்சராகவும் இருந்தார்.
2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தோல்வி அடைந்தார்.

இதையடுத்து அவர் மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்து 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2' என்ற தொடரில் நடிக்கிறார்.
இந்தத் தொடரின் முதல் சீசன் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது. இதில் ஸ்மிருதி இரானி நடித்த துளசி விராணி கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.
தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஸ்மிருதி இரானி ஒரு எபிசோடிற்கு 14 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவதாகத் தகவல்கள் வெளியானது. இதுவரை டிவி சீரியலில் ஒரு எபிசோடிற்கு இவ்வளவு சம்பளம் யாரும் வாங்கியதில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்த ஸ்மிருதி இரானியிடம் 14 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பேசிய ஸ்மிருதி இரானி, “நாம் ஒரு பென்ச் மார்க்கை செட் செய்து சீராக அதில் நல்ல ரிசல்ட்டைக் கொடுக்கும் போது நமக்கு அதிக ஊதியம் கொடுக்கலாம்தானே? இங்கிருக்கும் ஒவ்வொரு ஆண், பெண் நடிகர்களை விடவும் நான் அதிக சம்பளம் வாங்குகிறேன் எனில், அதற்கு என்னுடைய கடின உழைப்புதான் காரணம்.

நீங்கள் மட்டுமே நட்சத்திரமா அல்லது உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் நட்சத்திரமாக மாற்றும் திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. எனக்கு அந்தத் திறன் இருக்கிறது. என்னுடன் நடிப்பவர்களுக்குள் இருக்கும் நட்சத்திரத் தன்மையையும் என்னால் வெளிக்கொண்டு வர முடியும்.
துளசியுடன் நடித்த அமர் உபாத்யாய்க்கும் தனி மார்கெட் உருவானது இல்லையா? சூட்டிங் சமயங்களில் சக நடிகர்கள் என்னிடம் அரசியலைப் பற்றி அதிகம் பேசுவது நிறைவான உணர்வைத் தருகிறது. நாடாளுமன்றம் எப்படிச் செயல்படும் என்பதைக் கேட்டறிய நிறையப் பேர் ஆர்வமாக இருக்கின்றனர்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...