செய்திகள் :

நீதிபதி அறைக்கு நேரில் வரச் சொன்னது ஏன்? அன்புமணி வழக்குரைஞர் பாலு விளக்கம்

post image

சென்னை: பாமக பொதுக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வழக்கில், ராமதாஸ், அன்புமணி இருவரும் அறைக்கு நேரில் வருமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்தது ஏன் என்பது குறித்து அன்புமணி வழக்குரைஞர் பாலு விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆக. 9ஆம் தேதி பாமக பொதுக்குழுவுக்கு அன்புமணி அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அதனை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு வழக்குரைஞர்கள் இன்றி தன்னுடைய நீதிபதி அறைக்கு அழைத்து வர முடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த வழக்கை என்னால் 5 நிமிடத்தில் முடிக்க முடியும் என்றாலும், கட்சி மற்றும் இருவரின் நலன் கருதி தன்னுடைய அறையில் ஆஜராகும்படி கோரிக்கை வைத்ததாக நீதிபதி குறிப்பிட்டதாக அன்புமணி தரப்பு வழக்குரைஞர் பாலு கூறியுள்ளார்.

மேலும், நீதிபதி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அன்புமணி இன்று மாலை நீதிமன்றம் வருகிறார் என்றும் பாலு சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ராமதாஸ் - அன்புமணி இருவரும் நீதிபதி அறைக்கு நேரில் வர அழைப்பு விடுத்திருக்கிறார்.

மனுவில் கூறப்பட்டிருப்பது என்ன?

பாமக தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. புதிய தலைவராக கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தோ்வு செய்யப்பட்டு, கடந்த மே 30-ஆம் தேதி முதல் அவா் தலைவராகச் செயல்பட்டு வருகிறாா்.

கட்சியின் அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுக்கும் பொறுப்பும், நிா்வாகப் பொறுப்புகளும் கட்சியின் நிறுவனத் தலைவருக்கே வழங்கி கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் பொதுக்குழு மற்றும் அவசர பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரமும் அவருக்கே உள்ளது.

ஆனால், ஆக. 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவுள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளாா். அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இன்று வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பும் வழக்குரைஞர்கள் இன்றி, இன்று மாலை தனது அறைக்கு வர நீதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார்.

Anbumani's lawyer Balu has explained why Madras High Court Judge N. Anand Venkatesh called Ramadoss and Anbumani to appear in person in the case of opposing the PMK general committee.

இதையும் படிக்க.. பொதுக்குழு விவகாரம்! நீதிபதி அறைக்கு ராமதாஸ், அன்புமணி நேரில் வர அழைப்பு!!

வரும் 13ஆ தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ... மேலும் பார்க்க

விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட்!

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று(ஆக.08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம். கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதனருக... மேலும் பார்க்க

உயர் நீதிமன்றத்துக்கு வர இயலாது: ராமதாஸ் கடிதம்

சென்னை: அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், நீதிபதி நேரில் வர அழைப்பு விடுத்திருந்த நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு வர இயலாது என ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா! ஆக.15க்குள் பெறுவது எப்படி? முழு விவரம்

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிக் கட்டணங்களை செலுத்த கொண்டு வரப்பட்ட ஃபாஸ்டேக் முறையில் ஆக.15 முதல் ஆண்டு சந்தா முறை அறிமுகம் செய்யப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலை மற்றும்... மேலும் பார்க்க

காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி? செல்லூர் ராஜு விளக்கம்

கடந்த வாரம் மதுரை வந்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரில் செல்லூர் ராஜுவை ஏற்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோவுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், க... மேலும் பார்க்க

சமூக நீதி விடுதி பெயர் மாற்றம்! திமுக அரசுக்கு பாஜக கண்டனம்!

பள்ளி, கல்லூரி மாணவர்களின் விடுதிகளின் பெயர்களை சமூக நீதி விடுதிகள் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெயர் மாற்றம் செய்ததற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.சமூக நீதி விடுதி பெயர் மாற... மேலும் பார்க்க