செய்திகள் :

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

post image

சென்னையில் இருந்து ஆந்திரம் மாநிலத்துக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் கே.பி. ஜெபாஸ்டியன் தலைமையிலான சிறப்பு குழுவினர் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எழும்பூர் ரயில்வே நடைமேடையில் 36 மூட்டைகளில் தமிழக அரசால் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதையடுத்து அங்கு அமர்ந்திருந்த நபரை அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸார், 900 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர் .

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், சென்னை ராயபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(35) எனத் தெரியவந்தது.

இவர் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை அதிக விலைக்கு விற்க ஆந்திரம் மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை தமிழ்நாட்டில் மீட்கப்பட்டது எப்படி?

Police seized 900 kg of ration rice that was being smuggled from Chennai to Andhra Pradesh.

ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிருஷ்டவசமானது: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை தமிழ்நாட்டில் மீட்கப்பட்டது எப்படி?

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை 13 நாள்களுக்குப் பின் திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் சத்தீஸ்கர் மாநில போலீஸார் மீட்டனர். குழந்தையை மீட்ட போ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் முறைகேடு: பெங்களூருவில் ராகுல் காந்தி தலைமையில் இன்று ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் இன்று(ஆக.8) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்... மேலும் பார்க்க

டிரம்ப் வரி விதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் புதின் - அஜீத் தோவல் சந்திப்பு!

புது தில்லி: ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து இந்தியப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதி... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தராலியில் 44 பேர் உயிருடன் மீட்பு

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் தராலி கிராமத்தில் நடந்து வரும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையினர் நிலச்சரிவில் சிக்கிய 44 பேரை விமானம் மூலம் பத்த... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு

ராஜஸ்தானில் வியாழக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர்ச் சேதம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 10.7 மணிக்கு ல... மேலும் பார்க்க