செய்திகள் :

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு! நடப்பு கூட்டத்தொடரில் ரூ. 135 கோடி இழப்பு!

post image

நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் பிற்பகல்வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக் கோரி, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதுதொடர்பான விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்தும் விவாதிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவையில் இன்று கேள்விநேரத்தின்போது, பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவையை பிற்பகல்வரையில் ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதனிடையே, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைக் கண்டித்த அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், தற்போதைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 56 மணிநேரம் 49 நிமிடங்கள் இழக்கப்பட்டதாகக் கூறி, மாநிலங்களவையையும் பிற்பகல்வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடத்துக்கு ரூ. 2.5 லட்சம் செலவிடப்படுவதாக 2012-ல் மதிப்பீடு வெளியிடப்பட்டது. அப்படியென்றால், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ. 4 லட்சம்வரையில் செலவிடப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு மணிநேரத்துக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால், ரூ. 2.4 கோடி செலவாகும்; 56 மணிநேரம் 49 நிமிடங்களுக்கு ரூ. 135.6 கோடி இழக்கப்படுகிறது.

Parliament Monsoon Session Day 14: Both Houses adjourned for the day

வாக்குத் திருட்டு விவகாரம்: யாரும் தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி எச்சரிக்கை!

புதுதில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசட... மேலும் பார்க்க

உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட கொலை..! ஆசிப் குரேஷியின் மனைவி பேட்டி!

நடிகை ஹுமா குரேஷியின் சகோதரர் பார்க்கிங் பிரச்னையால் கொலை செய்யப்பட்டது குறித்ட்து அவரது மனைவி, “சிறிய பிரச்னைக்கு கொலை செய்துள்ளார்கள்” என அதிர்ச்சியுடன் பேசியுள்ளார்.தென் கிழக்கு தில்லியான போகல் பகு... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: காங்கிரஸ் புலனாய்வு செய்தது எப்படி? விடியா வெளியிட்ட ராகுல்

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் நேற்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், காங்கிரஸ் எவ்வாறு புலனாய்வு செய்தது என்பது குறித்த விடிய... மேலும் பார்க்க

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா். உதம்பூா் மாவட்டத்தின் கத்வா ப... மேலும் பார்க்க

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்

‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா். பசுமை புரட்சியின் தந்தை என்று... மேலும் பார்க்க