செய்திகள் :

வாக்குத் திருட்டு: காங்கிரஸ் புலனாய்வு செய்தது எப்படி? விடியா வெளியிட்ட ராகுல்

post image

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் நேற்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், காங்கிரஸ் எவ்வாறு புலனாய்வு செய்தது என்பது குறித்த விடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மக்களிடையே பிரசாரங்களுக்குச் செல்லும்போது, அங்கு மக்களிடையே இருக்கும் எண்ணங்களை நன்கு உணர முடிந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதற்கு நேர் மாறான முடிவுகள் வந்தது. அதனால்தான் தேர்தல் நடக்கும் விதத்தில் எங்களுக்கு சந்தேகமே எழுந்தது என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் சேர்க்கப்பட்டு, பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

மத்திய அரசுக்கு ஆதரவாக, தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டுக்கு துணை போயிருப்பதாகக் குற்றம்சாட்டிய ராகுல், பவேறு ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை, ஒரு விடியோவை ராகுல் வெளியிட்டிருக்கிறார். பல்வேறு மாநிலங்களில், எவ்வாறு வாக்குத் திருட்டு நடந்தது என்பதற்கு பதிலளிக்கும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத் தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிராக நடந்த மோசடி என்றும் ராகுல் அந்த விடியோவில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மோசடியில் ஈடுபடுபவர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும், நேரம் மாறும், குற்றம் செய்தவர்கள் தண்டனையை சந்தித்தே ஆக வேண்டும் என்றார்.

அது மட்டுமல்ல, மகாராஷ்டிர தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலின்போது, ஏராளமான புது வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவருமே பாஜகவுக்கு வாக்களித்திருந்ததும் சந்தேகத்தை எழுப்பியது.

வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை காங்கிரஸ் கேட்டபோது, அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதன் மூலம் முறைகேடு நடப்பது உறுதி செய்யப்பட்டது. பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா?

வாக்குத் திருட்டு விவகாரம்: யாரும் தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி எச்சரிக்கை!

புதுதில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசட... மேலும் பார்க்க

உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட கொலை..! ஆசிப் குரேஷியின் மனைவி பேட்டி!

நடிகை ஹுமா குரேஷியின் சகோதரர் பார்க்கிங் பிரச்னையால் கொலை செய்யப்பட்டது குறித்ட்து அவரது மனைவி, “சிறிய பிரச்னைக்கு கொலை செய்துள்ளார்கள்” என அதிர்ச்சியுடன் பேசியுள்ளார்.தென் கிழக்கு தில்லியான போகல் பகு... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு! நடப்பு கூட்டத்தொடரில் ரூ. 135 கோடி இழப்பு!

நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் பிற்பகல்வரையில் ஒத்திவைக்கப்பட்டது.ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன்... மேலும் பார்க்க

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா். உதம்பூா் மாவட்டத்தின் கத்வா ப... மேலும் பார்க்க

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்

‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா். பசுமை புரட்சியின் தந்தை என்று... மேலும் பார்க்க