செய்திகள் :

கோவை தனியார் நிறுவனம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த கை - காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி

post image

கோவை மாவட்டம், சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. அதன் அருகிலேயே ரயில் தண்டவாளம் இருக்கிறது.

கோவை

ஏதாவது கொலை சம்பவமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அவர்களும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள்.

காவல்துறை விசாரணையில், அது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவரின் கை என்பது தெரியவந்தது. அழகுபாண்டிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கணவன் - மனைவி பிரச்னை

இதனிடையே அவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த அழகுபாண்டி, கள்ளபாளையம் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அப்போது அவரின் வலது கை மற்றும் கால்கள் துண்டாகியுள்ளது. தற்போது அழகுபாண்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அழகுபாண்டியின் துண்டிக்கப்பட்ட கை மற்றும் சிதைந்த கால்கள், கள்ளப்பாளையத்தில் உள்ள உயிரியல் மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அழகுபாண்டி

அப்போது அங்கிருந்து ஒரு நாய்  கையை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் நடந்த கொலை.. கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 50 நாள்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

கோவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று இரண்டு பேர் கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன் (45) மற்றும் பாளையங்கோட்டை பகுதிய... மேலும் பார்க்க

தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் - அருள் ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அருள் ஆனந்தி ஆண்டிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஆனந்தி வேலைக்கு செ... மேலும் பார்க்க

சேலம்: நகைக்கடை உரிமையாளர்கள் மீது ஆசிட் வீசி நகைக் கொள்ளை முயற்சி; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் அப்பகுதியில் ஏ.வி.எஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8:45 மணியளவில் இருவர் நகை வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது ... மேலும் பார்க்க

`திருமணம், நட்பு, ஆபாச மெசேஜ்' - Facebook -ல் பழகிய பெண்களிடம் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

சைபர் கிரிமினல்கள் அடிக்கடி பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பணமோசடி புகார் அல்லது திருமண ஆசை என எதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் பறிக்கின்றனர். அதிகமான நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் ம... மேலும் பார்க்க

அந்தியூர் குதிரை சந்தை: மர்மமான முறையில் இறந்த 6 குதிரைகள்; பிரேதப் பரிசோதனை முடிவு சொல்வது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.ஆண்டுதோறும் ஆடி மாதம் குருநாதசுவாமி கோவிலின் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும்... மேலும் பார்க்க

டெல்லி: வாகனங்களை நிறுத்துவதில் தகராறு - பாலிவுட் நடிகை ஹுமா குரேஷின் சகோதரர் படுகொலை

பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆசிப் குரேஷி, டெல்லி நிஜாமுதின் பகுதியில் வசித்து வந்தார். ஆசிப் குரேஷி வீட்டிற்கு வெளியில் பக்கத்து வீட்டுக்காரர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இர... மேலும் பார்க்க