செய்திகள் :

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு! 3 பேர் படுகாயம்!

post image

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றிக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி நள்ளிரவு 1:20 மணிக்கு நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், 18 வயது இளம் பெண், 65 வயது முதியவர், 19 வயது இளைஞர் என மூவர் படுகாயமுற்றனர்.

மேலும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக, 17 வயது சிறுவன் ஒருவனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத சூழலில், இச்சம்பவம் குறித்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு (ஆகஸ்ட் 3 வரை) மிகக் குறைவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களே நியூயார்க் நகரில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 2024-ம் ஆண்டை விட நிகழாண்டில் (2025) 23 சதவீதம் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

Three people have been seriously injured in a shooting in New York City, USA.

நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் நினைவுநாள்

ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக அந்த நகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் 95 நாடுகளைச... மேலும் பார்க்க

காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனா். இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில வ... மேலும் பார்க்க

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விடுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உக்ரைன் போா் நிறுத்தம் தொடா... மேலும் பார்க்க

5 மாதங்களுக்குப்பின்... விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு 4 விண்வெளி வீரர்களுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.அன்னேமெக்க்ளெய்ன், நிகோல் அயெர்ஸ், டாகுயா ஆன... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை..! - உக்ரைன் மக்கள் கருத்து!

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை என்று உக்ரைன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதி... மேலும் பார்க்க

லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து: 6 ராணுவ நிபுணர்கள் பலி

தெற்கு லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர். தெற்கு லெபனானில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருள்கள் சனிக்கிழமை வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 ராணுவ நிபுண... மேலும் பார்க்க