செய்திகள் :

நாட்டின் ஒரே தங்கச் சுரங்கமும் இனி தேசியமயம்! நைஜர் ராணுவ அரசு அதிரடி!

post image

நைஜர் நாட்டை ஆட்சி செய்து வரும் ராணுவ அரசு, அந்நாட்டிலுள்ள ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை, தேசியமயமாக்குவதாக அறிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சியின் மூலம், அப்போதைய அரசு கவிழ்க்கப்பட்டு, ராணுவம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது.

ராணுவ அரசின் ஆட்சி துவங்கியது முதல், அந்நாட்டிலுள்ள வளங்களைச் சுரங்கம் தோண்டியெடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நைஜர் நாட்டின் ஒரேயொரு தங்கச் சுரங்கமான சொசைடே டெஸ் மைன்ஸ் டு லிப்டாகோவை (எஸ்.ஐ.எல்), ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக்கினல் ரிசோர்சஸ் எனும் நிறுவனம் நிர்வகித்து வந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு அந்தச் சுரங்கத்தின் அதிகப்படியான பங்குகளை வாங்கியதன் மூலம் அது அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்நிறுவனம் பல அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, எஸ்.எம்.எல்-ஐ கைப்பற்றி தேசியமயமாக்குவதாக, நைஜர் ராணுவ அரசின் தலைவர் ஜெனரல் அப்துர்ரஹ்மானே டியானி அறிவித்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அந்தச் சுரங்கத்தில், தொழில்துறை தங்கம் உற்பத்தி 177 கிலோ அளவிலும், கைவினை உற்பத்தி 2.2 டன்களாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அந்தச் சுரங்கத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். இதனால், அந்நாட்டு அரசு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் 2,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் களமிறக்கியது.

ஆப்பிரிக்க நாடுகளான புர்கினா ஃபஸோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் ராணுவ ஆட்சி அமைந்த பின்னர் அந்நாடுகளின் வளங்களைக் கட்டுப்படுத்தி வந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதல்! மத்தியஸ்தம் செய்த டிரம்ப்புக்கு நோபல் வழங்க கோரிக்கை!

The military government ruling Niger has announced the nationalization of the country's only gold mine.

காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ... மேலும் பார்க்க

ரஷியாவின் முதல் துணைப் பிரதமருடன் அஜீத் தோவல் சந்திப்பு

ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா். ரஷியா... மேலும் பார்க்க

நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் நினைவுநாள்

ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக அந்த நகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் 95 நாடுகளைச... மேலும் பார்க்க

காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனா். இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில வ... மேலும் பார்க்க

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விடுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உக்ரைன் போா் நிறுத்தம் தொடா... மேலும் பார்க்க

5 மாதங்களுக்குப்பின்... விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு 4 விண்வெளி வீரர்களுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.அன்னேமெக்க்ளெய்ன், நிகோல் அயெர்ஸ், டாகுயா ஆன... மேலும் பார்க்க