செய்திகள் :

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை! 2 நாள்களில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 47 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலூசிஸ்தானின் ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா நகரத்துக்கு அருகில், கடந்த ஆக.7 நள்ளிரவு முதல் ஆக.8 அதிகாலை வரையில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில், 33 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில், சம்பஸாவை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று (ஆக.8) நள்ளிரவு முதல் இன்று (ஆக.9) அதிகாலை வரையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் மேலும் 14 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்கள் கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடனான தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தனர்.

அதன் பிறகு, பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நாட்டின் ஒரே தங்கச் சுரங்கமும் இனி தேசியமயம்! நைஜர் ராணுவ அரசு அதிரடி!

It has been reported that 47 terrorists have been killed by Pakistani security forces in Balochistan province.

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விடுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உக்ரைன் போா் நிறுத்தம் தொடா... மேலும் பார்க்க

5 மாதங்களுக்குப்பின்... விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு 4 விண்வெளி வீரர்களுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.அன்னேமெக்க்ளெய்ன், நிகோல் அயெர்ஸ், டாகுயா ஆன... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை..! - உக்ரைன் மக்கள் கருத்து!

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை என்று உக்ரைன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதி... மேலும் பார்க்க

லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து: 6 ராணுவ நிபுணர்கள் பலி

தெற்கு லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர். தெற்கு லெபனானில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருள்கள் சனிக்கிழமை வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 ராணுவ நிபுண... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் ஒரு விமானம்கூட சுட்டு வீழ்த்தப்படவில்லை! ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இந்தியா - பாக். இடையே சொற்போர்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமைத் தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து, இந்தியாவுக்கு பத... மேலும் பார்க்க

டிரம்ப்பின் 50% வரி விதிப்பால் இந்தியா, ரஷியா, சீனா கைகோக்கும்! ஜான் போல்டன் எச்சரிக்கை

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்து உத்தரவிட்டிருப்பதால் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும் என்றும் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்றும் முன்னாள் அமெரிக்க தேசிய ... மேலும் பார்க்க