செய்திகள் :

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

post image

சத்தீஸ்கரில் புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

பெங்களூரூ கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஜத் படிதார். இவர் தனது மொபைல் எண்ணை 90 நாள்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால், அவரது எண் செயல் இழந்து போனதால் அந்த எண் சத்தீஷ்கரைச் சேர்ந்த மணீஷ் நபருக்கு ஒதுக்கப்பட்டிருந்கிறது.

ஆனால் மணிஷுக்கு இது கிரிக்கெட் வீரர் ரஜத் படிதார் பயன்படுத்திய மொபைல் எண் என்று தெரியாது.

புதிய சிம் கார்ட்டை ஆக்டிவேட் செய்தபோது வாட்ஸ்அப்பில் ரஜத் படிதார் படம் இருந்துள்ளது. மேலும் ரஜத் படிதார் என நினைத்து இந்த எண்ணிற்கு விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரும் அழைத்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்ததும் சம்மந்தப்பட்ட அந்த நபரை ரஜத் படிதார் தொடர்புகொண்டிருக்கிறார்.

ஆனால் யாரோ தன்னை கலாய்ப்பதாக எண்ணிய மணீஷ்கிண்டலாக தோனி பேசுகிறேன் என்று பதிலளித்துள்ளார். இந்த விஷயம் போலீஸுக்கு செல்லவே உடனே மணீஷ் வீட்டுற்கு அவர்கள் விரைந்துள்ளனர். இதன்பிறகே உண்மை என்ன என்பதை மணீஷ் அறிந்திருக்கிறார்.

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

பின்னர் அவரிடம் நிலமையை எடுத்து சொல்லி நம்பரை விட்டுக்கொடுத்துவிடுமாறு பேசியுள்ளனர்.

அதையடுத்து அந்த மொபைல் எண்ணை ரஜத் படிதாரிடம் கொடுக்க அந்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து ரஜத் படிதார், மத்தியப் பிரதேச சைபர் செல் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

A Chhattisgarh youth unknowingly gets RCB skipper Rajat Patidar's old SIM, fields calls from Virat Kohli and AB de Villiers before police step in.

இரு வெவ்வேறு வாக்காளர் அட்டைகளுடன் பிகார் துணை முதல்வர்! தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா, இருவேறு வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு... மேலும் பார்க்க

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகண்டில் நிகழும் காலநிலை மாற்றம், பெருவெள்ளம், நிலச... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாத வல்லரசாக இந்தியா மாறும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.மத்திய பிரதேசத்தில் ரைசன் என்ற பகுதியில் ரயில் உற்பத்தி மையத்தின் அடிக்கல் நாட்டு வி... மேலும் பார்க்க

நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஃபட்னவீஸ் நன்றி

நாக்பூர்-புணே இடையே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,... மேலும் பார்க்க

டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி

டிஜிட்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ... மேலும் பார்க்க

தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை(ஆக.11) பேரணி

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாளை (ஆகஸ்ட் 11) தில்லியில் பேரணி நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஒர... மேலும் பார்க்க