செய்திகள் :

நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஃபட்னவீஸ் நன்றி

post image

நாக்பூர்-புணே இடையே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயில் இன்று தொடங்கப்பட்டுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயிலைத் தொடங்குமாறு ரயில்வே அமைச்சரிடம் நாங்கள் முன்பு கோரிக்கை விடுத்தோம்.

அவர் இந்தக் கோரிக்கை குறித்து நேர்மறையான முடிவை எங்களுக்கு உறுதியளித்திருந்தார். மேலும், பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்தால், அந்த முடிவு இன்று நிறைவேறியுள்ளது. இந்த ரயிலைத் தொடங்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தியாவில் உள்ள மற்ற வந்தே பாரத் ரயில்களைவிட இது மிக நீண்ட தூர ரயிலாக இருக்கும்.

இந்த ரயில் 12 மணி நேரத்தில் 881 கிமீ தூரத்தை கடக்கும். அனைத்து முக்கிய நிலையங்களிலும் நிறுத்தங்கள் இருக்கும். இது புணேவுடன் விதர்பா மற்றும் வடக்கு மகாராஷ்டிரத்தை இணைக்கும் இணைப்பை பெரிய அளவில் அதிகரிக்கும் என்றார்.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

பெங்களூருவின் கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி நேரில் கொடியசைத்து தொடங்கி வைத்த அதேசமயத்தில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா–அமிர்தசரஸ், மற்றும் அஜ்னி (நாக்பூர்)–புணே வந்தே பாரத் சேவைகள் காணொளி வாயிலாக தொடங்கப்பட்டன.

Maharashtra Chief Minister Devendra Fadnavis on Sunday thanked Prime Minister Narendra Modi for launching the Nagpur-Pune Vande Bharat train, saying it will increase the connectivity of Vidarbha with Pune.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகண்டில் நிகழும் காலநிலை மாற்றம், பெருவெள்ளம், நிலச... மேலும் பார்க்க

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

சத்தீஸ்கரில் புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பெங்களூரூ கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஜத் படிதார். இவர் தனது மொபைல் எ... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாத வல்லரசாக இந்தியா மாறும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.மத்திய பிரதேசத்தில் ரைசன் என்ற பகுதியில் ரயில் உற்பத்தி மையத்தின் அடிக்கல் நாட்டு வி... மேலும் பார்க்க

டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி

டிஜிட்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ... மேலும் பார்க்க

தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை(ஆக.11) பேரணி

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாளை (ஆகஸ்ட் 11) தில்லியில் பேரணி நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஒர... மேலும் பார்க்க

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை மனைவி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜக்தீஷ்பூர் பகுதியில் ஃபசன்கஞ்ச் கச்னாவ் கிராமத்தில் வசிப்பவர் அன்சார் அகமத... மேலும் பார்க்க