செய்திகள் :

அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன்களை அனுப்பும் நாடு இந்தியா!

post image

அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அனுப்பும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பேசிய அவர்,

''நாட்டில் மின்னணு பொருள்களின் உற்பத்தி, கடந்த 11 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதியானது 8 மடங்கு உயர்ந்து, ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

2025 நிதியாண்டில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மொத்த ஸ்மார்ட்போன்களில் 44% இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டவை. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13% ஆக இருந்த நிலையில், தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செய்யப்பட்டு வரும் இறக்குமதிகளில், பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து தற்போது செய்யப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டில் இருந்த உற்பத்தி நிலையங்களை விட இரு மடங்கு அதிகரித்து தற்போது 300 ஸ்மார்ட்போன் உற்பத்தி நிலையங்கள் நாட்டில் உள்ளன.

அரசுத் தரவுகளின்படி, 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் 26% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. தற்போது அந்த எண்ணிக்கை 99.2% ஆக அதிகரித்துள்ளது.

2014 நிதியாண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான உற்பத்தி மதிப்பு ரூ. 18,900 கோடியாக இருந்த நிலையில், 2024 நிதியாண்டில் ரூ. 4.22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால், சர்வதேச சந்தையில் சமரசமற்ற வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், உலகளாவிய தொழில்நுட்ப மையமாக இந்தியா மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

India now largest smartphone supplier to US, output up 6x in 11 years: IT Minister

தெருநாய்களால் சோகம்! தேசியளவிலான தடகள வீரர் பலி!

ஒடிஸாவில் தெருநாய் கடித்து தேசியளவிலான மாற்றுத்திறனாளி தடகள வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸாவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதியில், போலங்கிர் பகுதியில் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 10) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், ... மேலும் பார்க்க

உபி.: கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலி

உத்தரப் பிரதேசத்தில் கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், சர்காதல் கிராமத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழ கிணற்றில் பம்ப் பெல்ட்டை சரிசெய்ய மூ... மேலும் பார்க்க

இரு வெவ்வேறு வாக்காளர் அட்டைகளுடன் பிகார் துணை முதல்வர்! தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா, இருவேறு வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு... மேலும் பார்க்க

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகண்டில் நிகழும் காலநிலை மாற்றம், பெருவெள்ளம், நிலச... மேலும் பார்க்க

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

சத்தீஸ்கரில் புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பெங்களூரூ கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஜத் படிதார். இவர் தனது மொபைல் எ... மேலும் பார்க்க