செய்திகள் :

உபி.: கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலி

post image

உத்தரப் பிரதேசத்தில் கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலியாகினர்.

உத்தரப் பிரதேச மாநிலம், சர்காதல் கிராமத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழ கிணற்றில் பம்ப் பெல்ட்டை சரிசெய்ய மூன்று சகோதரர்கள் ஞாயிற்றுக்கிழமை இறங்கியுள்ளனர். அப்போது மூச்சுத் திணறி அவர்கள் 3 பேரும் பலியாகினர்.

பலியானவர்கள் சத்ரபால் (25), அவரது உறவினர் ஹிமான்ஷு (22) மற்றும் அவரது தம்பி காஷிஷ் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சத்ரபால் முதலில் கிணற்றுக்குள் இறங்கியபோது உள்ளே இருந்த நச்சு வாயு காரணமாக சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது.

ஹிமான்ஷுவும் காஷிஷும் அவரைக் காப்பாற்ற ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று மயக்கமடைந்தனர். கிராமவாசி ஒருவரின் உதவிக்கான அலறல் சத்தத்தைக் கேட்டு, உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்தில் கூடினர்.

பின்னர் உள்ளூர்வாசி ஒருவர், அவரது முகத்தில் ஈரமான துணியைச் சுற்றி, கயிற்றைப் பயன்படுத்தி கிணற்றுக்குள் இறங்கி, சகோதரர்களை ஒன்றாகக் கட்டி, அவர்களை வெளியே இழுத்தார்.

மோசமான நாள்களை எப்படி எதிர்கொள்வது? நந்திதா ஸ்வேதா பதில்!

பின்னர் அவர்கள் நூர்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் எந்த சட்ட நடவடிக்கையையும் தொடர விரும்பவில்லை என்று போலீஸார் குறிப்பிட்டனர்.

Three brothers allegedly suffocated to death while attempting to fix a pump belt around 20 feet deep inside a well in Sarkathal village on Sunday, the police said.

அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன்களை அனுப்பும் நாடு இந்தியா!

அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அனுப்பும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் மெ... மேலும் பார்க்க

தெருநாய்களால் சோகம்! தேசியளவிலான தடகள வீரர் பலி!

ஒடிஸாவில் தெருநாய் கடித்து தேசியளவிலான மாற்றுத்திறனாளி தடகள வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸாவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதியில், போலங்கிர் பகுதியில் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 10) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், ... மேலும் பார்க்க

இரு வெவ்வேறு வாக்காளர் அட்டைகளுடன் பிகார் துணை முதல்வர்! தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா, இருவேறு வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு... மேலும் பார்க்க

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகண்டில் நிகழும் காலநிலை மாற்றம், பெருவெள்ளம், நிலச... மேலும் பார்க்க

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

சத்தீஸ்கரில் புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பெங்களூரூ கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஜத் படிதார். இவர் தனது மொபைல் எ... மேலும் பார்க்க