செய்திகள் :

Raksha Bandhan: 1500 மாணவிகளின் ராக்கி கயிறுகளால் திகைத்த ஆசிரியர்; வைரல் வாத்தியார் Khan sir யார்?

post image

பீகார் மாநிலம் பாட்னாவில் இயங்கி வருகிறது Khan GS Research Centre. இந்த நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் கஃபைசல் கான், மாணவர்களால் 'கான் சார்' என அழைக்கப்படுகிறார்.

SSC, Railway, UPSC போன்ற அரசு வேலை தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது. அவர்களை ஊக்குவிப்பது எனச் செயல்பட்டு வருகிறார். கடினமான அரசியல், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களை கிராம மாணவர்களும் புரிந்துகொள்ளும் மொழி, உவமைகள், நகைச்சுவைகள் மூலம் எளிதாக விளக்குகிறார்.

சில நேரங்களில் நடப்புக்கால அரசியல், சமூக பிரச்னைகள் பற்றியும் திறந்த மனதுடன் பேசுகிறார். அவரது வீடியோக்கள் கோடிக்கணக்கான வீயூஸ்களைக் கடந்திருக்கின்றன.

இந்த நிலையில், சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷபந்தன விழாவை தனது மாணவர்களுடன் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டம் குறித்து ஆகஸ்ட் 9-ம் தேதி தன் இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.

அதில், ``இன்று, என் மணிக்கட்டில் கட்டப்பட்ட ராக்கிகளின் எண்ணிக்கை 15,000க்கும் அதிகமாக இருந்தது. இந்த ராக்கிகள் மிகவும் கனமாக இருப்பதால் என்னால் என் கையை உயர்த்தக்கூட முடியவில்லை. இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற அனுபவத்தைப் பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.

என் மாணவிகள் என்று சொல்வதை விட அவர்களை என் சகோதரிகளாகவே கருதுகிறேன். அவர்களின் பாசத்தில் மயங்கிவிட்டேன். சாதி, மதம், மாநிலங்கள் என எல்லா காரணிகளையும் கடந்து எனக்கு ராக்கி கட்டினார்கள். இது மனிதநேயத்தைக் காட்டுகிறது. இதை விட சிறந்த பண்டிகை இருக்க முடியாது" என நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

கான் சாரின் இந்த வீடியோ 24 மணி நேரத்திற்குள் இன்ஸ்டாகிராமில் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பணமோசடி வழக்கில் சிக்கிய மகனை பாதுகாக்க சட்டம் பயிலும் 90 வயதான தாய் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிக்கொண்ட மகனை பாதுகாப்பதற்காக 90 வயதான தாய் ஒருவர் சட்டம் கற்றுக்கொண்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.ஹீ என்ற 90 வயதான தாய் தனது 57 வயதான மகன் லின்னை பாதுகா... மேலும் பார்க்க

”விராட் கோலி பேசுறேன்...” சிறுவர்களுக்கு வந்த கிரிகெட் நட்சத்திரங்களின் அழைப்பு - பின்னணி இதுதான்

சர்வதேச கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதாரின் தொலைபேசி எண் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு சென்றதையடுத்து பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் சத்த... மேலும் பார்க்க

`16 வயதில் மகளுக்கு செக்ஸ் பொம்மை கொடுக்க விரும்பியது ஏன்?’ - நடிகை கெளதமி கபூர் விளக்கம்

தாம்பத்தியம் குறித்து அதிகமான பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பேசுவதில்லை. ஆனால் பாலிவுட் மற்றும் டிவி நடிகை நடிகை கெளதமி கபூர் தனது மகளுடன் இது குறித்து 16வது வயதிலேயே பேசியதாக ரியாலிட்டி ஷோ ஒன்றில் கல... மேலும் பார்க்க

மும்பை: இட்லி கடைக்காரரை உதைத்து மன்னிப்பு கேட்க வைத்த ராஜ் தாக்கரே கட்சியினர் - என்ன பிரச்னை?

மும்பையில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்றும், மராத்திக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்றும் ராஜ் தாக்கரே கூறி வருகிறார். இதனால் மராத்திக்கு எதிராக பேசுபவர்களை அல்லது மராத... மேலும் பார்க்க

Top News: `மாநில கல்விக் கொள்கை டு அன்புமணி பொதுக்குழு கூட்டம்' - ஆகஸ்ட் 8 ரவுண்ட்அப்

ஆகஸ்ட் 8 - முக்கிய செய்திகள்!* ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் காரணம் காட்டி இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்திருக்கும் நிலையில், புதினுடன் இன்று தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, "... மேலும் பார்க்க

Crying Club: `மனம் விட்டு அழுதால், மன அமைதி கிடைக்கும்!' - இந்தியாவில் பிரபலமடையும் கிரையிங் கிளப்

பொதுவாக ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி வந்தாலும், அதிக துக்கம் வந்தாலும் அதனை அழுகை மூலமே வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் அதிகமானோர் தங்களது துக்கம், உணர்ச்சி, மன அழுத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பா... மேலும் பார்க்க