செய்திகள் :

”விராட் கோலி பேசுறேன்...” சிறுவர்களுக்கு வந்த கிரிகெட் நட்சத்திரங்களின் அழைப்பு - பின்னணி இதுதான்

post image

சர்வதேச கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதாரின் தொலைபேசி எண் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு சென்றதையடுத்து பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்திலுள்ள மதகாவ் கிராமத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவர் உள்ளூர் மொபைல் கடையில் ஒரு புதிய ஜியோ சிம்மை வாங்கியிருக்கிறார். அதன் பின்னர் அவர் வாட்ஸ் அப்பை திறந்தவுடன் சிம்மின் சுயவிவர படமாக கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதார் புகைப்படம் வந்திருக்கிறது.

மணிஷ் மற்றும் கேம்ராஜ் என்ற இரு நண்பர்கள் கிராமத்தில் உள்ள மளிகை கடையில் அமர்ந்திருந்த போது அவர்கள் வாங்கிய புது சிம் கார்டுக்கு பல அழைப்புகள் வந்திருக்கின்றன. அதுவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் அழைப்புகள் வந்திருக்கிறது.

இவர்களின் ஒவ்வொரு அழைப்பிற்கும் மணிஷும் கேம்ராஜும் தங்களை மகேந்திர சிங் தோனி என்று அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

அதன் பின்னர் ஜூலை 15ஆம் தேதி மற்றொரு அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பில் "பாய் நான் ரஜத் பட்டிதார், அந்த எண் என்னுடையது தயவுசெய்து திருப்பி தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து அந்த சிறுவர்கள் அதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு தாங்கள் எம் எஸ் தோனி என்று பதிலளித்திருக்கின்றனர்.

அதன் பின்னர் அந்த தொலைபேசி எண்ணின் முக்கியத்துவத்தை அவர் விளக்கியிருக்கிறார். ஒருகட்டத்திற்கு மேல் இந்த விவகாரம் காவல்துறைக்கு சென்றுள்ளது.

காவல்துறையினர் மணிஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு உண்மையிலேயே இது ரஜத் பட்டிதாரின் தொலைபேசி எண் என்று புரிந்துள்ளது. அதன்பின்னர் சிம்கார்டை திருப்பி அளித்துள்ளனர்.

இது குறித்து கேம்ராஜ் கூறுகையில்” இந்த தவறான அழைப்புகள் மூலம் கோலியுடன் பேசியது மிகப் பெரிய தருணம். என் வாழ்நாள் இலக்கையே அடைந்திருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.

என்ன நடந்தது?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 90 நாட்களுக்கு மேல் செயல்படாத எண்களை மறுசுழற்சி செய்கின்றன. அதன்படி ரஜத் பட்டிதாரின் தொலைபேசி எண்ணும்,ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சிறுவர்களின் கைக்கு சென்றுள்ளது.

`16 வயதில் மகளுக்கு செக்ஸ் பொம்மை கொடுக்க விரும்பியது ஏன்?’ - நடிகை கெளதமி கபூர் விளக்கம்

தாம்பத்தியம் குறித்து அதிகமான பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பேசுவதில்லை. ஆனால் பாலிவுட் மற்றும் டிவி நடிகை நடிகை கெளதமி கபூர் தனது மகளுடன் இது குறித்து 16வது வயதிலேயே பேசியதாக ரியாலிட்டி ஷோ ஒன்றில் கல... மேலும் பார்க்க

மும்பை: இட்லி கடைக்காரரை உதைத்து மன்னிப்பு கேட்க வைத்த ராஜ் தாக்கரே கட்சியினர் - என்ன பிரச்னை?

மும்பையில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்றும், மராத்திக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்றும் ராஜ் தாக்கரே கூறி வருகிறார். இதனால் மராத்திக்கு எதிராக பேசுபவர்களை அல்லது மராத... மேலும் பார்க்க

Top News: `மாநில கல்விக் கொள்கை டு அன்புமணி பொதுக்குழு கூட்டம்' - ஆகஸ்ட் 8 ரவுண்ட்அப்

ஆகஸ்ட் 8 - முக்கிய செய்திகள்!* ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் காரணம் காட்டி இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்திருக்கும் நிலையில், புதினுடன் இன்று தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, "... மேலும் பார்க்க

Crying Club: `மனம் விட்டு அழுதால், மன அமைதி கிடைக்கும்!' - இந்தியாவில் பிரபலமடையும் கிரையிங் கிளப்

பொதுவாக ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி வந்தாலும், அதிக துக்கம் வந்தாலும் அதனை அழுகை மூலமே வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் அதிகமானோர் தங்களது துக்கம், உணர்ச்சி, மன அழுத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பா... மேலும் பார்க்க

குஜராத்: சமையலளரின் பேத்திக்கு தனது சொத்தை உயில் எழுதிக்கொடுத்த முதியவர் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

குஜராத் மாநிலத்தில் குஸ்தாத் என்பவர் தான் இறப்பதற்கு முன்பு தனது வீட்டில் சமையலாளராக பணியாற்றிய பெண்ணின் பேத்தியான அமிஷாவுக்கு தனது வீட்டை வழங்குவதாக உயில் எழுதி கொடுத்துள்ளார். முன்னாள் டாடா இண்டஸ்ட்... மேலும் பார்க்க

’பிரான்ஸை விட இந்தியாவில் தான் பாதுகாப்பாக...’ கவனம் பெற்ற பிரெஞ்சு பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆசிரியையாக பணிபுரியும் பிரெஞ்சு பெண் ஒருவர், இந்தியாவில் வாழ்வது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நைஜீரிய யூடியூபரான பாஸ்கல் ஒலால... மேலும் பார்க்க