செய்திகள் :

Top News: `மாநில கல்விக் கொள்கை டு அன்புமணி பொதுக்குழு கூட்டம்' - ஆகஸ்ட் 8 ரவுண்ட்அப்

post image

ஆகஸ்ட் 8 - முக்கிய செய்திகள்!

* ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் காரணம் காட்டி இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்திருக்கும் நிலையில், புதினுடன் இன்று தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, "இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

* அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து, `அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை' என உத்தரவிட்டிருக்கிறது.

* அமலாக்கத்துறையானது வெறும் குற்றச்சாட்டு அடிப்படையில், தண்டனை இல்லாமலேயே பல ஆண்டுகளாக மக்களை சிறையில் அடைப்பதாக உச்ச நீதிமன்றம் காட்டம்.

* ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

* தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து கையெழுத்துடன் உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும் அல்லது பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய தேர்தல் ஆணையத்திடம், ராகுல் காந்தி தனது 5 முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.

* இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகிதம் வரிவிதித்த நிலையில், இந்தியா தங்களின் முக்கியமான கூட்டாளி என்றும், அது தொடரும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

* நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு கார்த்திக் என்ற ரசிகர் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள ரஜினி கோயிலில் 5,500-க்கும் மேற்பட்ட ரஜினி புகைப்படங்களை வைத்துக் கொண்டாட்டம்.

Crying Club: `மனம் விட்டு அழுதால், மன அமைதி கிடைக்கும்!' - இந்தியாவில் பிரபலமடையும் கிரையிங் கிளப்

பொதுவாக ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி வந்தாலும், அதிக துக்கம் வந்தாலும் அதனை அழுகை மூலமே வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் அதிகமானோர் தங்களது துக்கம், உணர்ச்சி, மன அழுத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பா... மேலும் பார்க்க

குஜராத்: சமையலளரின் பேத்திக்கு தனது சொத்தை உயில் எழுதிக்கொடுத்த முதியவர் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

குஜராத் மாநிலத்தில் குஸ்தாத் என்பவர் தான் இறப்பதற்கு முன்பு தனது வீட்டில் சமையலாளராக பணியாற்றிய பெண்ணின் பேத்தியான அமிஷாவுக்கு தனது வீட்டை வழங்குவதாக உயில் எழுதி கொடுத்துள்ளார். முன்னாள் டாடா இண்டஸ்ட்... மேலும் பார்க்க

’பிரான்ஸை விட இந்தியாவில் தான் பாதுகாப்பாக...’ கவனம் பெற்ற பிரெஞ்சு பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆசிரியையாக பணிபுரியும் பிரெஞ்சு பெண் ஒருவர், இந்தியாவில் வாழ்வது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நைஜீரிய யூடியூபரான பாஸ்கல் ஒலால... மேலும் பார்க்க

Instagram: இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்திய 3 புதிய அம்சங்கள்; என்னென்ன தெரியுமா?

பிரபல சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமை கோடிக்கணக்கானப் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற சமூக வலைதளங்களைவிட இன்ஸ்டகிராமிற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் புது பு... மேலும் பார்க்க

பீகார்: `அமெரிக்க அதிபர் ட்ரம்ப்' பெயரில் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பித்த ஆசாமி

பீகார் மாநிலத்தில் போலி குடியிருப்பு சான்றிதழ் வழக்கு அதிகரித்து வரும் நிலையில், சமஸ்திபூர் மாவட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயரில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்... மேலும் பார்க்க

Alert: 'உஷார்' - `டயர் பஞ்சர் பார்க்கும்போது இப்படியும் ஏமாத்துவாங்களா?' - எச்சரித்த அனுபவசாலி!

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் பிரனய் கபூர். இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. சாதாரண ஒரு பஞ்சர் மூலம் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பான எச்சரிக... மேலும் பார்க்க