செய்திகள் :

சென்னையில் ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித்தட விவரம்!

post image

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன மின்சார பேருந்து சேவை இன்று(ஆக. 11) தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட மின்சார பேருந்து பணிமனையை இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் உள்பட 135 தாழ்தள மின்சார பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தார்.

இந்த நிலையில், பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து முதல்கட்டமாக இயக்கப்படும் 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகளின் வழித்தடங்கள் தொடர்பான விவரத்தை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

ஏசி மின்சார பேருந்து செல்லும் வழித்தட விவரம்

தடம் எண் MAA2 என்ற பேருந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறுசேரி ஐடி பூங்கா வரை செல்லும்.

இந்தப் பேருந்து பல்லாவரம் புதிய மேம்பாலம், வேல்ஸ் பல்கலைக்கழகம், ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், குமரன் நகர், செம்மஞ்சேரி ஆலமரம், நாவலூர், சிப்காட் வழியாக இயக்கப்படும்.

தடம் எண் 95X என்ற பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் வரை இயக்கப்படும்.

இந்தப் பேருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா, வண்டலூர் கேட், பெருங்களத்தூர், இரும்புலியூர், தாம்பரம் கிழக்கு, கான்வென்ட், பல்லவன் நகர், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், காரப்பாக்கம், துரைப்பாக்கம், கந்தன்சாவடி, எஸ்.ஆர்.பி டூல்ஸ் வழியாக இயக்கப்படும்.

தடம் எண் 555S என்ற பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை இயக்க்கப்படும்.

இந்தப் பேருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா, வெங்கம்பாக்கம், கண்டிகை, மாம்பாக்கம், புதுபாக்கம், சாமியார் பண்ணை, கேளம்பாக்கம் சாலை சந்திப்பு, இந்துஸ்தான் கல்லூரி, நாவலூர், செம்மஞ்சேரி, குமரன் நகர் வழியாக இயக்கப்படும்.

தடம் எண் 19 என்ற பேருந்து தியாகராய நகரில் இருந்து திருப்போரூர் வரை இயக்கப்படும்.

இந்தப் பேருந்து சைதாப்பேட்டை, எஸ்.ஆர்.பி. டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர், இந்துஸ்தான் கல்லூரி, கேளம்பாக்கம், கோமான் நகர் சாலை சந்திப்பு வழியாக இயக்கப்படும்.

தடம் எண் 102 என்ற பேருந்து பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் வரை இயக்கப்படும்.

இந்தப் பேருந்து தலைமைச் செயலகம், சேப்பாக்கம், ராணி மேரி கல்லூரி, ஏ.எம்.எஸ். மருத்துவமனை, அடையார் பி.டி. இந்திரா நகர், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர், இந்துஸ்தான் கல்லூரி வழியாக இயக்கப்படும்.

தடம் எண் 570/570S என்ற பேருந்து கோயம்பேட்டில் இருந்து கேளம்பாக்கம் / சிறுசேரி ஐடி பூங்கா வரை இயக்கப்படும்.

இந்தப் பேருந்து எம்.எம்.டி.ஏ. காலனி, வடபழனி, அசோக் பில்லர், காசி தியேட்டர், ஈக்காடுதாங்கல், கிண்டி தொ.பே, கான்கோட் / வேளச்சேரி (Check Post), குருநானக் கல்லூரி, வேளச்சேரி, எஸ்.ஆர்.பி. டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர் (570: இந்துஸ்தான் கல்லூரி / 570S: சிப்காட்) வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

As the Chennai Metropolitan Transport Corporation has launched the air-conditioned electric bus service today (Aug. 11), details of the routes on which the buses will operate have been announced.

தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட நிலையில், பணியாளா்கள் அதில் சோ்ந்தால் சாதகமான நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குற... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எழும்பூா் ரயில் நிலைய ... மேலும் பார்க்க

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேறு கால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் ... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உயரும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 2047- இல் முதன்மை நாடாக உயரும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்... மேலும் பார்க்க

காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெ... மேலும் பார்க்க

இன்று ஆழ்வாா்ப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் டிடிகே சாலையில், ஆழ்வாா்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் மழைநீா் வடிகால் பணிகள்நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆழ்வாா்பேட்டை மேம்பாலம் இ... மேலும் பார்க்க