செய்திகள் :

ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!

post image

ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர்.

தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அன்றைதினம் இரவு 10.05 மணிக்கு ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானம் தரையிறங்கியதும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்படவில்லை.

இரவு 11.00 மணி வரை விமானத்திற்குள் பயணிகள் அடைத்து வைக்கப்பட்டனர். கேபின் குழுவினர் தெளிவான எந்த விளக்கமும் அளிக்காததால் அதில் இருந்தவர்கள் சற்று பதற்றத்துடன் இருந்துள்ளனர்.

பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை என்று விமான நிறுவன ஊழியர்கள் தாமதமாக விளக்கமளித்துள்ளர்.

இந்த நாடு, 2025க்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும்! எலான் மஸ்க் எச்சரிக்கை

நிலைமை சரியானவுடன் அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக இறங்கினர். இந்த சம்பவத்தின்போது எந்த காயங்களும் அல்லது மருத்துவ அவசரநிலைகளும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இருப்பினும் இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் திங்கள்கிழமை பிற்பகல் வரை எந்த முறையான அறிக்கையும் வெளியிடவில்லை.

A technical snag in an Air India flight arriving from Delhi led to a tense hour-long delay at Raipur airport, leaving around 160 passengers, including a sitting MLA, stranded inside the aircraft with no immediate explanation.

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க

4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!

புவனேஸ்வரைத் தவிர மேலும் நான்கு நகரங்களை டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.கட்டாக், ரூர்கேலோ, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூருக்கு ஐடி மற்றும் மின்ன... மேலும் பார்க்க

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில... மேலும் பார்க்க

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் இருந்து பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் திங்கள்கிழமை பாம்... மேலும் பார்க்க

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்! பாகிஸ்தான் ராணுவ தளபதி

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதனை தகர்ப்போம் என்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.மேலும், காஷ்மீரை பாகிஸ்த... மேலும் பார்க்க