4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!
புவனேஸ்வரைத் தவிர மேலும் நான்கு நகரங்களை டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.
கட்டாக், ரூர்கேலோ, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூருக்கு ஐடி மற்றும் மின்னணுத் துறையின் வளர்ச்சியைக் கொண்டுவர அரசு ஆர்வமாக உள்ளது. மாநிலத்தில் ஆராய்ச்சி, ஓ-சிப் திட்டத்தை இயக்குதல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஸ்டார்ட்ஆப் நெட்வொர்க்குகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக மாநில அரசு நான்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் ஐஐடி புவனேஸ்வர் இடையே ஆராய்ச்சி, முன்னோடித் திட்டங்கள், கொள்கை உள்ளீடுகள் மற்றும் புதுமைச் சுற்றுச்சூழல் அமைப்பு மேம்பாடு ஆகியவற்றிக்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அவர் கூறினார்.
ஓ-சிப் திட்டத்தை இயக்குவதற்காக அரசுக்குச் சொந்தமான ஒடிசா கணினி பயன்பாட்டு மையம் மற்றும் செமிகண்டக்டர் ஃபேப்லெஸ் ஆக்சிலரேட்டர் லேப் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை டைகான் புவனேஸ்வர் 2025இன் நிறைவு அமர்வில் உரையாற்றிய மாஜி, தனது இளைஞர்களைச் செய்யறிவு, சைபர்ப் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களுடன் பொருத்த உதவுகிறது என்று கூறினார்.
இந்த வளர்ச்சியைப் புவனேஸ்வரைத் தாண்டி கட்டாக், ரூர்கேலா, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூர்ப் போன்ற நகரங்களுக்கு எடுத்துச் செல்வதே எங்கள் முயற்சி, அவை டிஜிட்டல் மையங்களின் அடுத்த அலையாக உருவாக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.