செய்திகள் :

தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

post image

தில்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் தெரு நாய்களால் ரேபீஸ் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தில்லியில் குழந்தைகளும் முதியவர்களும் தெருநாய்களால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தில்லியில் தெருநாய்கள் இல்லாத வகையிலான சூழலை ஏற்படுத்த தில்லி அரசு, தில்லி மாநகராட்சி மற்றும் புதுதில்லி மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இதில், எவ்வித சமரசமும் செய்யக்கூடாது எனத் தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்ததாவது:

“தில்லி அரசு, தில்லி மாநகராட்சி மற்றும் புதுதில்லி மாநகராட்சி நிர்வாகங்கள் இணைந்து 8 வாரங்களில் நாய்கள் காப்பகங்களை உருவாக்க வேண்டும். அங்கு அடைக்கப்படும் தெருநாய்களுக்கு தினசரி பதிவை பராமரிக்க வேண்டும். காப்பகங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். நாய்களுக்கு கருத்தடை மற்றும் நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்.

ஒரு வாரத்துக்குள் நாய்கடிகள் பற்றி புகாரளிக்க உதவி எண்களை அறிவிக்க வேண்டும்.

தில்லி மற்றும் தலைநகர் வலையப் பகுதிக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும். காப்பகத்தில் அடைக்கப்பட்ட ஒரு நாயைகூட விடுக்கக் கூடாது.

ரேபீஸ் தடுப்பூசி கிடைக்கும் இடங்களை வெளியிட வேண்டும். நாய்களை பிடிக்கும் நடைமுறையை தடுக்க முயற்சிக்கு விலங்கு ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 6 வாரங்களுக்கு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ப. சிதம்பரம் கருத்து

உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலை நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ”ஒவ்வொரு நகரத்தின் புறநகரங்களிலும் நாய்கள் காப்பகம் உருவாக்கப்பட்டு, தெருநாய்களை அங்கு அடைத்து பராமரிக்க வேண்டும். நாய்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தண்ணீர் வசதிகள் நிச்சயம் ஏற்படுத்த வேண்டும்.

தெருக்கள் சுதந்திரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மக்களுக்கு குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இருப்பது அவசியம்.” எனத் தெரிவித்துள்ளார்.

SC has ordered the Delhi government and the municipal corporation administration to capture stray dogs roaming in Delhi and keep them in shelters.

இதையும் படிக்க : ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!

பிரமாணப் பத்திரம் கொடுக்க அது என் தரவுகள் அல்ல, உங்களுடையது! ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க

தூக்கத்தில் கொன்றுவிடு! ஆபத்தான ரகசியங்களை கடத்தும் செய்யறிவு! மனித குலத்துக்கு அழிவா?

செய்யறிவு பாதுகாப்பு அம்சங்கள் 2025 என்ற தலைப்புல் நடத்தப்பட்ட ஆய்வில், செய்யறிவு மாடல்கள், யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாடலுக்கு ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!

வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!

ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15... மேலும் பார்க்க