செய்திகள் :

SIR:``பீகார் துணை முதல்வரிடமும் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கு" - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

post image

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தப்பணியை மேற்கொண்டு வருகிறது.

பீகாருக்குப் பிறகு மேற்கு வங்கம், தமிழ்நாடு எனத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டது.

அதன் முதற்கட்டமாக பீகாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பானது. அதைத் தொடர்ந்து, ஆர்.ஜே.டி. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தச் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதற்கிடையில், ஆர்.ஜே.டி கட்சித் தலைவரும், பீகாரின் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ்வின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற தகவல் இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையின் மீது சந்தேகத்தை வலுப்படுத்தியது. அதற்குப் பிறகு தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

இந்த நிலையில், தேஜஸ்வி யாதவ் தன் எக்ஸ் பக்கத்தில், ``மோடி ஜியின் நெருங்கிய நண்பரான, பீகாரின் துணை முதல்வர் விஜய் சின்ஹா, இரண்டு மாவட்டங்களில் இரண்டு வெவ்வேறு EPICகள் (தேர்தல் புகைப்பட அடையாள அட்டை) வைத்திருக்கிறார்.

இதில் ஆச்சர்யப்படும் செய்தி என்னவென்றால், தேர்தல் ஆணையம் செயல்படுத்திய சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தப்பணிக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? விஜய் சின்ஹாவா அல்லது தேர்தல் ஆணையமா? விஜய் சின்ஹா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? அவருக்கு இரண்டு வெவ்வேறு நோட்டீஸ்கள் வருமா அல்லது இந்த விதிகள் எதிர்க்கட்சிக்கு மட்டும்தானா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் - துணை முதல்வர் விஜய் சின்ஹா
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் - துணை முதல்வர் விஜய் சின்ஹா

இதற்குப் பதிலளித்த விஜய் சின்ஹா, ``நானும் தனது குடும்ப உறுப்பினர்களும் பாட்னாவில் முன்னதாகவே வாக்காளர்களாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறோம். இருப்பினும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் என் சொந்த ஊரான லக்கிசராய் சட்டமன்றத் தொகுதியில் எனது பெயரைச் சேர்க்க விண்ணப்பித்திருந்தேன்.

விண்ணப்பிக்கும்போது, பாட்னாவிலிருந்து எனது பெயரை நீக்கவும் ஒருபடிவம் எழுதி வழங்கினேன். ஏதோ காரணத்தால், பாட்னாவிலிருந்து எனது பெயர் நீக்கப்படவில்லை, அதனால் நான் BLO (பூத்-நிலை அதிகாரி)-ஐ அழைத்து எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருக்கிறேன். என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. தேஜஸ்வி குழப்பத்தை விளைவிக்கிறார்." என்றார்.

இதைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவ், ``SIR-க்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில், விஜய் சின்ஹா இரண்டு மாவட்டங்களில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். இதில் விஜய் சின்ஹா முறையாகச் செயல்பட்டிருக்கிறார் என்றால், போலியான கையொப்பங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு வெவ்வேறு வாக்காளர் அட்டையை தேர்தல் ஆணையம் எப்படி உருவாக்கியிருக்க முடியும்? இத்தனைக்கும் அவர் ஒரு மாநிலத்தின் துணை முதல்வர்.

பீகார் துணை முதல்வர் விஜய் சின்ஹா
பீகார் துணை முதல்வர் விஜய் சின்ஹா

தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே பா.ஜ.க ஆதரவாளர்களுக்கு இந்த முறையில் வாக்குகளைப் பதிவு செய்கிறதா? இரண்டு வாக்காளர் அடையாள அட்டையிலும் ஒரு பட்டியலில் 57 வயது, மற்றொரு பட்டியலில் 60 வயது என வயது வித்தியாசமாக இருக்கிறது. இது வயது மோசடி இல்லையா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`ராஜினாமா செய்த தன்கர் எங்கே?; சீனா, ரஷ்யாவில்தான் இப்படி நடக்கும்’ - கேள்வி எழுப்பும் சஞ்சய் ராவத்

சமீபத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய நீதிபதிக்கு எதிராக ராஜ்ய சபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை துணை ஜனாதிப... மேலும் பார்க்க

SIR: வாக்குத் திருட்டு; `தேர்தல் ஆணைய முற்றுகைப் போராட்டம்' - 300க்கும் மேற்பட்ட எம்.பிகள் பேரணி?

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து ஊடகங்களிடம் பேசினார். மேலும், பீகாரில் நடைபெற்றுவரும் சிறப்பு வ... மேலும் பார்க்க

US Tarrif: `நண்பனாக இருப்பது உயிரைக் கொல்லும்? - அமெரிக்கா சொல்லும் பாடம்' - இரா.சிந்தன்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)மாநிலக்குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)கட்டுரையாளர்: இரா.சிந்... மேலும் பார்க்க

PMK: `நான் சொல்வது தான் நடக்கும்' - மகன் அன்புமணிக்கு பதிலளித்த தந்தை ராமதாஸ் - என்னப் பேசினார்?

கடந்த சில மாதங்களாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகனும், பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன் நீட்சியாக இருவரும் தனித் தனிப் பொதுக்கூட்டம் நடத்துவதாக அற... மேலும் பார்க்க

Gaza: 5 பத்திரிகையாளர்களைக் குறி வைத்து கொன்ற இஸ்ரேல் ராணுவம்; வலுக்கும் கண்டனம்; என்ன நடந்தது?

ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரின் கொடுமைகள் மேலும் மேலும் அதிகரித்துகொண்டே இருக்கின்றன. தற்போது இந்தப் போரில் ஐந்து பத்திரிகைளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? அல் ஜசீரா செய்தி நிறுவனத்... மேலும் பார்க்க

Trump: ''தான்தான் Bossனு சிலர் நினைக்கிறாங்க" - ட்ரம்பை மறைமுகமாகச் சாடுகிறாரா ராஜ்நாத் சிங்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியோடு அபராதத்தையும் விதித்துள்ளார். 'விவசாயிகளின் நலனுக்காக இந்த வரியை ஏற்க தயார்' என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம், இ... மேலும் பார்க்க