செய்திகள் :

தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிய பாஜக: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

புது தில்லி: தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்திருப்பதாவது, தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பை திருடுவதற்கான திட்டமிட்ட சதி.

எனது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, இந்த தீவிர மோசடியை அம்பலப்படுத்தியிருக்கிறார். ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியினர், நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாகச் சென்று கோரிக்கையை வலியுறுத்தவிருக்கிறோம். ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கு திமுக தோளோடு தோள் நிற்கும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் கணினிகள் மூலம் படிக்கக்கூடிய முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்,

அரசியல் ரீதியாக வாக்காளர் பட்டியல்களில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மற்றும் நமது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட நாசவேலை குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக, இந்தியாவின் ஜனநாயகத்தை பட்டப் பகலில் கொள்ளையடிப்பதை நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல்களில் போலியான வாக்காளர்களை சேர்த்திருப்பதாகவும், தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், வாக்குத் திருட்டு என்ற பெயரில், மோசடியை ஆதாரங்களுடன் ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார்.

சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா: ஓடுதளத்தில் மற்றொரு விமானம்! திக் திக் நிமிடங்கள்.. நடந்தது என்ன?

சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டபோது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் நின்றுகொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் தில்லிக... மேலும் பார்க்க

கோவையில் ரேஷன் கடையை அடித்து நொறுக்கிய காட்டு யானை!

கோவையில், காட்டு யானையொன்று நியாய விலைக் கடையை உடைத்து சேதப்படுத்தி, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை சூறையாடியது.கோவை மாவட்டம் புதூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளது அறி... மேலும் பார்க்க

கொலை வழக்கை முறையாக விசாரிக்காததால்.. சூலூர் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கோவை: கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் கோவை மாவட்டம் சூலூர் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுத்துள்ளார்.கொலை வழக்கை சரியாக விசாரணை மேற்கொள்ளாததால் சூலூர் காவல் ஆய்வாளர... மேலும் பார்க்க

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் உடுமலையில் ரூ.1,427 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்... மேலும் பார்க்க

உடுமலைப்பேட்டை: 1 கி.மீ. நடந்து வந்து மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை : உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஸ்டாலின் 1 கி.மீ. தொலைவு வரை நடந்து வந்து மக்களை சந்தித்தார்.உடுமலைப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள ஒரு வார்டில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில், அந்த வார்டு முழுவதும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசம... மேலும் பார்க்க